Monday, October 2, 2017

26.Thai Mann.

     விஜயன் காந்தி சித்தப்பாவை உற்றுப் பார்த்தான்.இந்த காந்தி சித்தப்பாவே

செல்லாம்மாவை தன்  மனதில் தாங்கி பேசுகின்றார் என்றால்,அதில் ஒரு

ஆத்மீகமான ஒரு அர்த்தம் இருக்கும்.அவர் பேசுவதை உற்று கவனித்தபடி

அவருடனும்,பால் பொழியும் நிலாவுடனும்,நடை பயின்றான்.என்னவோ

தெரியவில்லை:குறிப்பிட்ட சில மனிதர்களுடன் இருக்க நேரிடும்போது

அவர்களது இருப்பு, தென்றலின் இதமாய்  மனதை வருடும்.மனதில் ஒரு

இனம் புரியாத ஒரு அமைதி,ஒரு சந்தோஷம் நிலவி நம்மை சாந்தப்-

-படுத்தும்.விஜயன் அதை பூரணமாக உணர்ந்தான்.


       விஜயன் தன்னை உற்றுப் பார்ப்பதை கவனித்த காந்தி சித்தப்பா மெல்ல

சிரித்தபடி மேலே நடந்தார்.அவரை தொடர்ந்த விஜயனிடம் திரும்பி "தம்பி!

எனக்கு பெரிய வருத்தம்தான்:ஏன்னா உன் மருமகளைப் பற்றி உனக்கே

தெரியவில்லையே  என்ற வேதனை.சரி அதை விடு.இப்பவாவது அந்தக்

குழந்தையை பற்றி தெரிந்துக் கொள்ள கடவுள் உனக்கு ஒரு வாய்ப்பை

 உருவாக்கித் தந்தாரே! அது பெரிய விஷயம்ந்தான்.நீ கண்டிப்பாக இதற்கு

ஒரு நாள் அந்த கடவுளுக்கு நன்றி சொல்வாய் " என்று ஒரு பெரிய

பீடிகையுடன் தொடர்ந்தார்.,அவர் சொன்னதைக் கேட்ட விஜயன்

அவரை வியப்புடன் மறுபடியும் உற்று நோக்கினான். அவரது முகபாவனை,

அவரது கருத்தை மிக பலமாக ஆமோதிப்பதை போல தெரிந்தது.



     உடல் மொழி சத்தியத்தைத்தான் செப்பும்.விஜயனுக்கு அன்று அந்த

உண்மை மிகத் தெளிவாகப் புரிந்தது.அவர் சொல்லப் போவதை உன்னிப்பாக

கவனிக்க தயாரானான்.அவனுடன் அந்த அழகு நிலாவும் தயாரானது.அதற்கு

இது மிக நன்றாக தெரிந்த விஷயமென்றாலும்,நமக்குத் தெரிந்த,நமக்கு

இதம்தரும்  நல்ல விஷயங்களை நமக்குத் தெரிந்த மற்றவர்கள் திரும்ப,

திரும்ப புதிதாக அறிமுகமானவர்களுக்கு  சேர்க்கும் தருணங்களின் போது

நாம் உடனிருப்பது ஒரு இனிமையான அனுபவம்.அந்த அனுபவத்தை

அனுபவிக்கத்தான் அந்த பால் நிலாவும் இவர்களை தொடர்ந்தபடி வந்து

கொண்டு இருந்தது.


       
      காந்தி சித்தப்பா தொடர்ந்தார்."தம்பி! நான் சொல்றது உனக்கு புரியுதான்னு

பாரு! இப்போதெல்லாம்  வயதுக்கேற்ற தெளிவுடன் இருப்பவர்களை பார்ப்பது

என்பதே ஒருஅரிதான  விஷயமாக  இருக்கிறது.அப்படி இருக்கும்போது தன்

வயதைதாண்டி தெளிவுடன் இருப்பது என்பது ஒரு கல்மிஷமில்லாத

மனதால்தான் தம்பி !முடிகிற காரியமாக தெரிகிறது.அந்த வகை மனதிற்கு

சொந்தக்காரிதான் நம்ப செல்லம்மா.எல்லோரையும் தன்னுள்  பார்க்கும்

பக்குவமும், எல்லோரிலும் தன்னை பார்க்கும் அந்த பாந்தமும்  உள்ள மனம் 

பெரிய வரம் தம்பி !நம்ப செல்லாம்மாவிற்குஅந்த வகை மனது.  தம்பிக்கு

நான் சொல்வது  புரிகிறதா?" விஜயனை உற்றுப் பார்த்தார் காந்தி

சித்தப்பா.


   
      விஜயனுக்கு புரிந்ததை போலவும் இருந்தது.புரியாததை போலவும்

இருந்தது.ஆனால் அடுத்தடுத்து செல்லாம்மாவைப் பற்றி காந்தி சித்தப்பா

சொன்ன விவரங்கள்,விஜயனை ஓர் உலுக்கு உலுக்கின.அவர் சொன்னதன்

அர்த்தம் மிகத் தெளிவாக விஜயனுக்கு விளங்கியது.தன்னை ஆசுவாசப் -

-படுத்திக்  கொள்ள மிகவும் திணறினான் விஜயன்.




   
                                                                                                            தொடரும்..........

    

No comments:

Post a Comment