செல்லம்மாவை பார்த்ததும்,திரு.குள்ளமணிக்கு முதலில் ஒன்றுமே
புரியவில்லை.ஆனாலும்., " வா !வா! செல்லம்மா ! நீ இந்த அண்ணனை
மறந்து ரொம்ப நாளாயிடுச்சேன்னு ரொம்ப வருத்தப்பட்டேன்.இப்பதான் வழி
தெரிஞ்சதாக்கும் ".என்று வாஞ்சையுடன் வரவேற்றான்.அதைக் கேட்டதும்,
தன் நெற்றியை தட்டியபடி செல்லம்மா, " அடக் கடவுளே ! நான் ஏன்
வரலேன்னு உன் புள்ளைக்கு தெரிஞ்ச விஷயம்கூட உனக்கு தெரியலயே !
இதுலே வேற,என்னோட ஆண்டு அனுபவிச்சிட்டிருக்கும், பெரியப்பாவுக்கும்,
பெரியம்மாவுக்கும் தலைச்சன் புள்ளையா வேற வந்து பொறந்திருக்கே
!"மனதிற்குள் மிகவும் அங்கலாய்த்து போனாள் செல்லம்மா.
அதைக் கேட்டதும்,திடுக்கிட்டுப் போன திரு.குள்ளமணி, " என்ன
செல்லம்மா ! அப்ப இதுநாள் வரைக்கும் ஏதோ ஒரு காரணத்தோடுதான்
வரமே இருந்தாயாக்கும்.ஏன் ? என்னாச்சு ?.என்று பதற்றத்தோடு கேட்டான்.
இனிமேல் தன் பருப்பு வேகாது என்று தெள்ளென புரிந்தது குள்ளமணிக்கு.
உள்ளே ஏதோ வேலை இருப்பது போல நழுவ பார்த்தாள். அதற்கு இடம்
தராமல் " என்ன அண்ணி !செய்ய கூடாததெல்லாம் செஞ்சு வச்சுட்டு,இப்ப
நழுவ பார்த்தா எப்படி ? நம்ப ரெண்டு பேருக்கு நடுவுல இருக்கற இந்த
பஞ்சாயத்தை அண்ணனில்லே தீர்த்து வைக்கணும் ".குள்ளமணியின்
முகம் முழுவதுமாக இருண்டு போனது.
தன் மனைவியின் முகம் போன போக்கைப் பார்த்துத் திடுக்கிட்டு போனான்
திரு.குள்ளமணி.செல்லம்மாவை பார்த்து , " ஏன் செல்லம்மா ! என்னாச்சு ? "
என்று மிகவும் பதற்றத்தோடு வினவினான்.செல்லம்மா " அண்ணன்கிட்டே
இப்படி ஒரு பிரச்சனையோடு வந்து முகம் பார்த்து பேச வேண்டியதா
ஆயிடுச்சேன்னு மிகவும் வருத்தத்தோடு வந்திருக்கேன் அண்ணே !ஆனாலும்
வேற வழியில்லை; பேசித்தான் ஆகணும் ". திரு. குள்ளமணிக்கு விஷயம்
பெரிய விவகாரமான விஷயம் என்று புரிந்து போயிற்று.
எதுவும் பேசாமல் செல்லம்மாவை உற்றுப் பார்த்தான்.செல்லம்மா
தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு தொடர்ந்தாள். " அண்ணே ! தலைச்சன்
சம்சாரம் தாய்க்கு சமானம் அப்படிங்கற அர்த்தத்தை நினைச்சு பாக்கறியா ".
கேட்டுவிட்டு திரு.குள்ளமணியை உற்றுப் பார்த்தாள் செல்லம்மா.எந்த
பதிலும் வரவில்லை. ஆனால்,திரு.குள்ளமணி இன்னும் உன்னிப்பாக
கவனிப்பது புரிந்தது. " அப்படின்னா, தலைச்சனா பொறந்திருக்கிறவன்
தந்தையா இருக்கணும்னுதானே அர்த்தம்.அப்படி அண்ணன் இருந்திருந்தா,
இப்படி ஒரு அனர்த்தம் நடந்திருக்குமா ? பெத்தவங்களையும்,கூட பிறந்த-
-வங்களையும் ஒரு கண்ணாவும், வாழ வந்தவளையும்,புள்ளை குட்டி-
-களையும் ஒரு கண்ணாவும்,பார்த்து நிக்கற,காத்து நிக்கற பக்குவம் வர
வேணாமா !.அப்படி இல்லாததனாலேதானே அண்ணி உங்க வீட்டு குருவிக்
கூட்டையும் கலைத்து விட்டு ,எங்க வீட்டு குருவிக் குருவிக் கூட்டையும்
கலைக்க பார்க்குறாங்க.நாம ஒண்ணா இருக்கணும்,நல்லா இருக்கணும்னு
யார் சொன்னாலும் நல்லா கேட்டு நடக்கணும்தானே அண்ணே ! ஏன்னா!
ஒண்ணா இருந்தாதானே நல்லா இருக்க முடியும். நல்லா இருக்கணும்னா
ஒண்ணா இருந்தாதானே அண்ணே முடியும்.அது புரியாமே,இப்படி எதிலுமே
கருத்தே இல்லாமே கண்ணு போன வழியிலும்,கால் போன வழியிலும்
போயிட்டு இருந்தா,குடும்பம்ன்ற கோயிலே சிதிலமாயிடாதா ? இப்படி
எல்லாம்அ ண்ணி என்னை பேச வச்சிட்டாங்களேன்னு எனக்கு ரொம்ப
வருத்தம் அண்ணே !"
சொல்ல வேண்டியதை எல்லாம் ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள்
செல்லம்மா.இத்தனையும் கேட்டுக் கொண்டிருந்த திரு.குள்ளமணி,
செல்லம்மாவிற்கு எதிரில் வந்து நின்றான். " நெகிழ்ந்த குரலில் ," தாயீ !
இதில் உன் அண்ணியை குறை சொல்ல எதுவும் இல்லை;அவளுக்கு
தெரிந்தது அவ்வளவுதான்;பக்குவப்படாத அவளது அறிவை நான்
நம்பினதுதான் பெரிய குற்றம். இனிமே நான் தலைச்சன் புள்ளையா,
தந்தைக்கு சமானமா நடப்பேன்.உன் அண்ணியும்,எனக்கு தோள் தந்து
அவளும் தாயாக இருக்க அரவணைத்து செல்வேன்.என் கண்ணை திறந்த
காளியாத்தா தாயி நீ ". நெக்குருகி போனான் திரு.குள்ளமணி.விக்கித்து
போய் நின்றிருந்தாள் வெறும் குள்ளமணி.
தொடரும்...............
புரியவில்லை.ஆனாலும்., " வா !வா! செல்லம்மா ! நீ இந்த அண்ணனை
மறந்து ரொம்ப நாளாயிடுச்சேன்னு ரொம்ப வருத்தப்பட்டேன்.இப்பதான் வழி
தெரிஞ்சதாக்கும் ".என்று வாஞ்சையுடன் வரவேற்றான்.அதைக் கேட்டதும்,
தன் நெற்றியை தட்டியபடி செல்லம்மா, " அடக் கடவுளே ! நான் ஏன்
வரலேன்னு உன் புள்ளைக்கு தெரிஞ்ச விஷயம்கூட உனக்கு தெரியலயே !
இதுலே வேற,என்னோட ஆண்டு அனுபவிச்சிட்டிருக்கும், பெரியப்பாவுக்கும்,
பெரியம்மாவுக்கும் தலைச்சன் புள்ளையா வேற வந்து பொறந்திருக்கே
!"மனதிற்குள் மிகவும் அங்கலாய்த்து போனாள் செல்லம்மா.
அதைக் கேட்டதும்,திடுக்கிட்டுப் போன திரு.குள்ளமணி, " என்ன
செல்லம்மா ! அப்ப இதுநாள் வரைக்கும் ஏதோ ஒரு காரணத்தோடுதான்
வரமே இருந்தாயாக்கும்.ஏன் ? என்னாச்சு ?.என்று பதற்றத்தோடு கேட்டான்.
இனிமேல் தன் பருப்பு வேகாது என்று தெள்ளென புரிந்தது குள்ளமணிக்கு.
உள்ளே ஏதோ வேலை இருப்பது போல நழுவ பார்த்தாள். அதற்கு இடம்
தராமல் " என்ன அண்ணி !செய்ய கூடாததெல்லாம் செஞ்சு வச்சுட்டு,இப்ப
நழுவ பார்த்தா எப்படி ? நம்ப ரெண்டு பேருக்கு நடுவுல இருக்கற இந்த
பஞ்சாயத்தை அண்ணனில்லே தீர்த்து வைக்கணும் ".குள்ளமணியின்
முகம் முழுவதுமாக இருண்டு போனது.
தன் மனைவியின் முகம் போன போக்கைப் பார்த்துத் திடுக்கிட்டு போனான்
திரு.குள்ளமணி.செல்லம்மாவை பார்த்து , " ஏன் செல்லம்மா ! என்னாச்சு ? "
என்று மிகவும் பதற்றத்தோடு வினவினான்.செல்லம்மா " அண்ணன்கிட்டே
இப்படி ஒரு பிரச்சனையோடு வந்து முகம் பார்த்து பேச வேண்டியதா
ஆயிடுச்சேன்னு மிகவும் வருத்தத்தோடு வந்திருக்கேன் அண்ணே !ஆனாலும்
வேற வழியில்லை; பேசித்தான் ஆகணும் ". திரு. குள்ளமணிக்கு விஷயம்
பெரிய விவகாரமான விஷயம் என்று புரிந்து போயிற்று.
எதுவும் பேசாமல் செல்லம்மாவை உற்றுப் பார்த்தான்.செல்லம்மா
தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு தொடர்ந்தாள். " அண்ணே ! தலைச்சன்
சம்சாரம் தாய்க்கு சமானம் அப்படிங்கற அர்த்தத்தை நினைச்சு பாக்கறியா ".
கேட்டுவிட்டு திரு.குள்ளமணியை உற்றுப் பார்த்தாள் செல்லம்மா.எந்த
பதிலும் வரவில்லை. ஆனால்,திரு.குள்ளமணி இன்னும் உன்னிப்பாக
கவனிப்பது புரிந்தது. " அப்படின்னா, தலைச்சனா பொறந்திருக்கிறவன்
தந்தையா இருக்கணும்னுதானே அர்த்தம்.அப்படி அண்ணன் இருந்திருந்தா,
இப்படி ஒரு அனர்த்தம் நடந்திருக்குமா ? பெத்தவங்களையும்,கூட பிறந்த-
-வங்களையும் ஒரு கண்ணாவும், வாழ வந்தவளையும்,புள்ளை குட்டி-
-களையும் ஒரு கண்ணாவும்,பார்த்து நிக்கற,காத்து நிக்கற பக்குவம் வர
வேணாமா !.அப்படி இல்லாததனாலேதானே அண்ணி உங்க வீட்டு குருவிக்
கூட்டையும் கலைத்து விட்டு ,எங்க வீட்டு குருவிக் குருவிக் கூட்டையும்
கலைக்க பார்க்குறாங்க.நாம ஒண்ணா இருக்கணும்,நல்லா இருக்கணும்னு
யார் சொன்னாலும் நல்லா கேட்டு நடக்கணும்தானே அண்ணே ! ஏன்னா!
ஒண்ணா இருந்தாதானே நல்லா இருக்க முடியும். நல்லா இருக்கணும்னா
ஒண்ணா இருந்தாதானே அண்ணே முடியும்.அது புரியாமே,இப்படி எதிலுமே
கருத்தே இல்லாமே கண்ணு போன வழியிலும்,கால் போன வழியிலும்
போயிட்டு இருந்தா,குடும்பம்ன்ற கோயிலே சிதிலமாயிடாதா ? இப்படி
எல்லாம்அ ண்ணி என்னை பேச வச்சிட்டாங்களேன்னு எனக்கு ரொம்ப
வருத்தம் அண்ணே !"
சொல்ல வேண்டியதை எல்லாம் ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள்
செல்லம்மா.இத்தனையும் கேட்டுக் கொண்டிருந்த திரு.குள்ளமணி,
செல்லம்மாவிற்கு எதிரில் வந்து நின்றான். " நெகிழ்ந்த குரலில் ," தாயீ !
இதில் உன் அண்ணியை குறை சொல்ல எதுவும் இல்லை;அவளுக்கு
தெரிந்தது அவ்வளவுதான்;பக்குவப்படாத அவளது அறிவை நான்
நம்பினதுதான் பெரிய குற்றம். இனிமே நான் தலைச்சன் புள்ளையா,
தந்தைக்கு சமானமா நடப்பேன்.உன் அண்ணியும்,எனக்கு தோள் தந்து
அவளும் தாயாக இருக்க அரவணைத்து செல்வேன்.என் கண்ணை திறந்த
காளியாத்தா தாயி நீ ". நெக்குருகி போனான் திரு.குள்ளமணி.விக்கித்து
போய் நின்றிருந்தாள் வெறும் குள்ளமணி.
தொடரும்...............
No comments:
Post a Comment