Sunday, October 8, 2017

28.Thai Mann.

          வீடு வந்து சேர்ந்த பின்னும்,விஜயனால் தன்னை ஆசுவாசப்படுத்திக்

கொள்ள முடியவில்லை.காந்தி சித்தப்பா, செல்லாம்மாவை பற்றி

சொன்னதை எல்லாம் பிரமிப்போடு அசை போட்டுக் கொண்டிருந்தான்.அவர்

சொன்னமுதல் சம்பவம்:


           மாலை நேரம்.செல்லம்மா தன் பாட்டி வீட்டுக்கு கிளம்புவதற்கு

முன்னால் வீட்டிற்கு பின்புறம் அமைந்திருக்கும் கொட்டடியில் மாடுகளுக்கு

வைக்கோல் போட்டு தண்ணிக் காட்டி விட்டு எப்பொழுதும் போன்றே

அவைகளுடன் விடைபெறும்  பாவனையில்அவைகளை முதுகிலும்,கழுத்துப்

பகுதியிலும் ,முகத்திலும் வாஞ்சையாக தடவிக் கொண்டு பேசலானாள்.


         எல்லோருக்கும் மூத்ததாக இருக்கும் பசுவிடம், "சரி லட்சுமி ! நான்

ஆத்தாவை  பார்க்க கிளம்புறேன்.எல்லோருக்கு வயிறும் ,மனசும்

நிரம்பியிருக்கும்னு நம்பறேன்". மற்ற பசுக்களைக் காட்டி" எல்லோரையும்

பத்திரமா பார்த்துக்கோ என்ன! " என்றாள்.அந்த லட்சுமி பசுவும் புரிந்துக்

கொண்டதை  போல நன்றாகவே தலையாட்டியது.ஏனென்றால்,அதற்கும்,

மற்ற பசுக்களுக்கும் செல்லம்மா என்றால் உயிர்;உயிர் என்றால் அது

செல்லம்மா.


       செல்லம்மாவின் அம்மாகூட செல்லம்மாவை செல்லமாக திட்டிக்

கொண்டு இருந்தாள் ."ஏன் செல்லம்மா! நீ எங்களை யாரையும் கொட்டடி

பக்கமே விடாமெ நீயே எல்லாவற்றையும் பாத்துக்கிட்டா சரிப்படுமா!

நாளைக்கு நீ கல்யாணமாகி போன பிறகு,உனக்காக இவை ஏங்கி படுத்துடும்

செல்லம்மா!எனக்கு ரொம்பவே பயமா இருக்கு". "நீ ஏம்மா பயப்படறே?நான்

இதோ பக்கத்தில் இருக்கும் ஆத்தா  ஊரிலேதானே வாழ்க்கைப்படப்

போறேன்;நானே தினமும் வந்து கவனிச்சுக்கிறேன்.நீ எதற்கும் கவலைப்

படாமே வேலையை பாரு ".இது செல்லாம்மாவின் பதில்.மிகவும்

தெளிவானஉறுதியான பதில்.அம்மா அசந்து போவாள்.


      செல்லம்மாவின் பதிலில் தெரியும் தெளிவையும்,உறுதியையும் பார்த்து,

அம்மா ஆரம்பத்த்தில் சிறிது குழப்பத்துடன் கேட்டார் , "ஏன் செல்லம்மா!

ஆத்தா  ஊரிலே,உனக்கு யாரையாவது மனசுக்கு பிடிச்சிருக்கா? உன் கல்யாண

விஷயத்திலே இவ்வளவு உறுதியா இருக்கே!"."என்னம்மா பேசறே! வீட்டிலே

இத்தனை பேரு இருந்துட்டு எனக்கு பிடிச்சவனை நான்தான் பார்க்கணு-

-மாக்கும்! நல்ல கதையா இருக்கே! ". " அதில்லே  செல்லம்மா!ஆத்தா

ஊரிலேதான் வாழ்க்கை படுவேன் இவ்வளவு உறுதியா சொல்றியே!அதான்

கேட்டேன் ". அம்மா கேட்டு வாய் மூடவில்லை.காட்டமாக பதில் வந்தது

செல்லாம்மாவிடமிருந்து.



      " உன் உடன் பிறப்புக்கு தன் அம்மான்னு தோணி  இருந்திருந்தா  நான் ஏன்

அந்த ஊரிலேதான் வாழ்க்கை படணும்னு  இப்படி கிடந்து அல்லாடறேன்.

உன் உடன் பிறப்புக்கு அப்படியே வானத்திலிருந்து குதிச்சிட்டாத நினைப்பு.

அப்படியே குதிச்சுட்டு இருக்கும்போதே வளர்ந்து, படிச்சு முடிச்சு,  வேறே

மண்ணிலே வேலைக்கு போயிடுச்சு போல! பெத்த தாயை, தாய்மண்ணை ,

சொந்தபந்தத்தை, தன கடமையை  எல்லாத்தையும் குழி தோண்டி

புதைச்சுட்டு  பறந்து போயாச்சு. நன்றி கெட்ட ஜென்மம்! ".செல்லம்மாவின்

காட்டமான பதிலில் அவளது அம்மா உறைந்து போனாள்.அது மட்டும்

அல்ல.அந்த பதிலில்,  செல்லம்மா  தன் பாட்டியின் மேல் கொண்டிருக்கும்

நிதர்சனமான அன்பின்  ஆழமும், அந்த ஆழமான அன்பின்  வெளிப்பாடான

 ஒரு நித்ய பூரண கரிசனமும்  தெளிந்த நீரோடையாய் தெளிவாகி போனது

அவள் அம்மாவுக்கு. ஒரு ஆழ்ந்த பெருமூச்சுடன் அவ்விடம் விட்டு

 நகர்ந்தாள்.



         முதல் சம்பவத்தை அசை போடும்போதே விஜயன் அயர்ந்து போனான்.

எல்லாமே குடும்பத்திலிருந்துதான் அதாவது வீட்டிலிருந்துதான் ஆரம்பம்

என்பது எவ்வளவு எதார்த்தமான,நிதர்சனமான உண்மை.அதில் முதல்

ஆரம்பமாக இருக்க வேண்டியது உறவுகளின் உணர்தல்தான் என்று

விஜயனுக்குத் தோன்றியது.உறவுகளை உணரும்போதுதான் அந்த

உறவுகளின் தொடர்புகள் நைந்து போக விடாமல் பேண முயற்சிப்போம்.

அதன் காரணமாக நம் அருமையான உறவுகளின் தொடர்புகளை அழகான 

தொடர்கதையாக்க  விடாமல்  முளைக்கும் இடையூறுகளை  லாவகமாக

களையும் ஒரு நிதானமும், நேர்த்தியும்  நம்முள்  ஒன்றாக கைகோர்த்து,நம் 

உறவுகளை நிலைத்து செழிக்கச் செய்யும்.செல்லம்மாவிடம் அந்த 

உறவுகளின் உணர்தல் அவளுள் பொக்கிஷமாக நிரம்பியிருப்பது விஜயனுக்கு

தெள்ளத் தெளிவாக புரிந்து போனது.அதன் மூலம் உறவுகளை

மேம்படுத்துதலின் உன்னதத்தை ஆழமாக புரிந்து கொண்டான்.


       
       அடுத்த சம்பவத்தை அசை போடும் முன் தன்னை திடப் படுத்திக்

கொண்டான் விஜயன்.





                                                                                                   தொடரும்..............



         

No comments:

Post a Comment