Saturday, May 24, 2014

11.Thuymaiyai Virumbu.

   தூய்மையை வெண்மையின் மறுப் பக்கமாகக் கொள்ளலாம்.பளிங்கின் மறுப்

பக்கமாகவும் கொள்ளலாம்.மன வளமையின் இன்னொரு பரிணாமமாகவும்

கொள்ளலாம்.தூய்மையைக் கடைப் பிடிக்க முடியாதவர்களையும்  கூட

தூய்மையான சுற்றுச் சூழல்கள்,அத்தகையவர்களை தூய்மையை கடைப்

பிடிக்கச் செய்யும் உந்து சக்திகளாக செயல்படுகின்றன.


   தூய்மை, அகத்தையும்,புறத்தையும் ஒரு சேர பளீரென பிரகாசப் படுத்தும்

திறமைக் கொண்டது.மனதையும் உடலையும் ஒன்றாக சாந்தப் படுத்தும்

வலிமைக் கொண்டது.சாந்த நிலையில் இருக்கும் அகமும்,புறமும் எவ்வித

சலனங்களுக்கும் இடங்கொடாது.இந்த சலனமற்ற அகத்திற்கும்,புறத்திற்கும்

நேர்மறை எண்ணங்களுடன் நெருங்கிய,நேர்த்தியான,ஆரோக்கியமான

ஒரு தொடர்பு இருக்கும்.அது அவர்களின் பகுத்தறியும் அறிவைப் பலப்படுத்தி

ஆரோக்கியமான,பல  சாதனைகளுக்கு சாத்தியமான பாதையில் இட்டுச்

செல்லும்.


    நல்லது.இந்த நிலையை அடைய  நாம் எந்த வழிமுறைகள பின்பற்றலாம் 

என ஆராய்ந்தால்,சில எளிய வழி முறைகள் இருக்கின்றன.அவைகளை

ஒருமனதாக  நாம் கடைப்பிடித்தோமானால்,எதையும் செம்மையாக செயல்

படுத்தலாம்.


   முதலில் அகத்தை கையாள்வதில் கவனம் கொள்வோம்.நமது அகத்திற்கு 

தனது இலக்கு எது என்பதைத் தெளிவுப்படுத்தலாம் .அந்த இலக்கு

நாம்தான் என்பதை   அதற்கு புரியப்  படுத்தலாம்.நாம் இறைவனின் நேரடிக்

கண்காணிப்பில் செயல் பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று நம் சில பல

தினசரி பழக்க வழக்கங்கள் மூலம் அதற்கு தெரியப்படுத்தப்படுத்தலாம்.


   உதாரணமாக,ஒரு நாளின் ஆறு கால பூஜையை அதற்கு அறிமுகப்

படுத்தலாம்.அது மனதார கசிந்து வழிப்படும் ஒரு நொடி பூஜையாகக் கூட

இருக்கலாம்.கீழ்காணும் முறையில்  வழிப்படலாம்.

1. காலை எழுந்தவுடன்,

2. காலை உணவருந்துமுன்,

3. மதியம் உணவருந்துமுன்,

4. மாலை விளக்கு வைத்ததும்,

5. இரவு உணவருந்துமுன்,

6. இரவு உறங்குமுன்.


   பூஜையின் மகத்துவம்,அதன் முக்கியத்துவம் நம் மனதிற்கு புரிய

ஆரம்பித்ததும்,அதற்கும், இறைவனின்  நேரடி கண்காணிப்பில் இருக்கிறோம்

என்ற எண்ணம் வலுப்படும்.எச்சரிக்கை உணர்வுடன் செயல்படும்.

இறைவனுக்கு இசைவில்லாத எதிர்மறை எண்ணங்களை அண்ட விடாது.

அகம் தூய்மைப் பெறும்.சீரிய பாதைகளுக்கு வழிக் காட்டும்.


    புறத் தூய்மைக்கு, நாம் முதலில் நம்மை பலப்படுத்த வேண்டியது மிகவும்

அவசியமானதொன்றாகும்.அதற்கு நாம் நம்மை ஏதாவது ஒரு பயன் தரும்

செயலில் ஈடுபடுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.இருபது நிமிடங்களுக்கு

ஒரு முறை நமது செயல்பாடுகள் மாறிக் கொண்டே இருக்குமாறு பார்த்துக்

கொண்டோமானால் அலுப்புத் தட்டாது.



   குறிப்பாக.ஒரு நாளில்,நமது இல்லத்தில், ஒரு பத்து நிமிடங்கள் பொதுத்

 தூய்மைக்கும்,ஒரு ஐந்து நிமிடங்கள் நமது இல்லத்தின்  ஏதாவது ஒருக்

குறிப்பிட்டப் பகுதியின்  தூய்மைக்கும் பயன்படுத்தும் நேர்த்தியைக் கற்றுக்

கொண்டால் நமது இல்லமும் என்றும் ஒரே மாதிரியான துய்மையான

நிலையில் காணப்படும். ஒவ்வொரு நாளும் நமக்கு, நாம் ஒரு சமயத்தில்

தொலைத்தப்  புதையல்கள்கிடைத்துக் கொண்டே இருக்கும்.நாள் முழுதும்

உற்சாகமாக செயல்படலாம்.நமது இல்லத்தின் தூய்மை நமக்கு உற்சாகத்தின்

ஊற்றாகும்.நமது தன்னம்பிக்கையும் சீராக மேல் நோக்கி தன் பயணத்தைத்

தொடர்வதால் நமது உடலும்  எந்தவிதமான எதிர்மறை  எண்ணங்களுக்கும்

இடம் தராது.அதன் விளைவாக  எந்தவிதமான எதிர்மறை செயல்களுக்கும்

நம்மிடம் இடமிருக்க வாய்ப்புகள் இல்லை.


    நமது அகமும்,புறமும் என்றும் ஒன்றை ஒன்று சார்ந்து செயல்படுவதால்

அதை இரண்டையும் என்றும் தூய்மையுடன் இருக்குமாறு நாம்  பார்த்துக்

கொண்டோமானால் அதன் செயல்பாடுகளில் எவ்வித ஊறும் ஊனமும்

இருக்க வாய்ப்பில்லை.




  


   


 


Saturday, May 17, 2014

10.Uriya Idathil Serkka Virumbu ( Porutgalai )

   நமது அன்றாடப்  பணிகள் எந்தத்  தடைகளும் இல்லாமல் சீராக நடைபெற

வேண்டுமெனில்  நமது அன்றாட செயல்பாட்டில் சிறிது சிரத்தையை

நடைமுறைப் படுத்த முற்பட்டோமானால்,நமது அன்றாட பணியில் எந்த

தேக்கநிலையும் ஏற்பபடாமல்  நமது நேரத்தை நேர்த்தியாக சேமிப்பதுடன் ,

நமது மனநிலையும், உடல் நிலையும்  எந்த குழப்ப நிலைக்கும் உட்படாமல்

சீராக செயல்படும். ஒரு தெளிவான நிலையில் இருக்கும்.


   அதாவது  நமது இல்லத்தில் நம் பயன்பாட்டில் இருக்கும் அனைத்துப்

பொருள்களும் அதற்குரிய இடங்களில் இருக்குமாறு பார்த்துக் கொண்டாலே

மிக அதிக அளவில் விரயமாகும் நமது நேரமும், நம் உடல் நலமும்,மன

நலமும் நல்ல பாதுகாப்பில் இருக்கும்.நமது கவனக் குறைவால்,சில

சமயங்களில் சாதாரண பொருட்களின் இடம் மாறுதல்களே நமது

அசாதாரணமான சொற்களுக்கு வழி வகுக்கும்.அதுவே முக்கியமான

பொருட்கள் எனில், அந்த அசாதரணமான சொற்களின் பிரயோகங்கள்

தொடரும்.எதிர்ப்பார்க்காத எதிர்மறை விளைவுகளுக்கு வழி

வகுக்கும்.இல்லத்தில் அமைதிக்கு பங்கம் ஏற்படும்.


   அதனால் நம் இல்லத்தில் நமது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை

நமது அன்றாட பயன்பாட்டில் இருக்கும் பொருட்களையும்,அவர்களது பள்ளி

சம்பந்தமான பொருட்களையும் அதனதன் இடத்தில் சேர்க்க, சேர்ப்பிக்க

பயற்சிக் கொடுத்து பழக்கப் படுத்தப்பட வேண்டும்.இந்த நல்ல பழக்கத்தை

நாமும் கற்று,நம் குழந்தைகளுக்கும்  கற்றுக் கொடுப்பதன் மூலம் நம்

குழந்தைகள் மேலும் மேலும்  பல நல்ல பழக்க வழக்கங்களைக்  கற்றுக்

கொள்ள வழி ஏற்படுத்தித் தரலாம். 




  

Thursday, May 15, 2014

9.Kai mel gavanam. Virumbu,

   மனதை ஒருமுகப் படுத்த விருப்பமா? இதோ  மிகவும் எளிதான ஒரு வழி.நம்

கை எந்தப்பணியை செய்ய ஆரம்பிக்கிறதோ அதை கவனத்தில் கொண்டு

அந்தப் பணிமுடியும் வரை அதில் நம் கவனம் இருக்குமாறு நாம், நம்

மனதிற்கு ஒருஅன்புக் கட்டளையிட்டோமானால்,நம் மனது தன் பயிற்சியைத்

தொடங்கி விடும்.இந்த அன்புக் கட்டளையை  மறவாமல்  நாம் ஒரு மூன்று

நாட்களுக்கு நம் மனதிற்கு  தொடர்ந்து நினைவுப் படுத்திக் கொண்டே

இருந்தோமானால் நம் மனதிற்கு அது நன்கு பதிந்து விடும். நான்காவது

நாளிலிருந்து அது தானே தன் பணியில்கவனம் செலுத்த ஆரம்பித்து,

தொடர்ந்து,சிறப்பாக செயலாற்ற ஆரம்பிக்கும்.


    உதாரணத்திற்கு இல்லத்தில்,இல்லத்தரசிகளுக்கு ஐம்பெரும் சக்திகளான 

நிலம்,நீர்,அக்னி,வாயு ஆகாயம் இவைகளின் மேல் தனி கவனம் தேவை.

இல்லத்தை நிர்வகிப்பதில் இந்தஐம்பெரும் சக்திகளின் பங்கு மிகவும்

முக்கியமானது.சிறிது அயர்ந்தால் கூட பெரும் விபத்திற்கு வித்திட்டு விடும்.


    பெரும்பாலான நமது இல்லப் பணிகள் இந்த ஐம்பெரும் சக்திகளை சார்ந்தே

இருக்கின்றன.நமது கைகள் அந்தந்தப் பணிகளைத் துவங்குமுன் நம்

மனதிற்கு,"என் அன்பு மனமே!உன் சகல கவனமும் நாம் இப்போதுத்

துவங்கும் இந்தப் பணியில் இருக்கட்டும்.இந்தப் பணி முடியும் வரை உன்

கவனத்தை சிதற விடாமல் இதை மேற்பார்வையிட்டு,இப்பணி முடிந்ததும்

எனக்கு அதை உடனடியாக நினைவூட்டு". என்று அதற்குப் பதியும்படி அன்புக்

கட்டளையிட்டோமானால்,சரியாக அந்தக் குறிப்பிட்டப்  பணி முடிந்ததும்,நம்

அன்பு மனம், அந்தப் பணி முடிந்ததை தவறாமல் நம் நினைவிற்குக் கொண்டு

வந்து விடும்.


   இதையே நாம் நம் அலுவலகப் பணிகளுக்கும்  நேர்த்தியாகப் பின்பற்றாலாம்.

ஆனால் இதை செயல்படுத்துதல் எளிதாக இருக்க வேண்டுமெனில், நமக்கும்,

நம் மனதிற்குமான பிணைப்பு மிகவும் நேர்த்தியானதாக இருக்க வேண்டும்.

அதை உறுதிப்படுத்திக் கொண்டோமானால்,நமது பொன்னான நேரம்,

உழைப்பு,செல்வம் எல்லாவற்றையும் மிகவும் நேர்த்தியாக சேமிக்க,

செலவழிக்க வாய்ப்புக்கள் அதிகம்.  
         

Wednesday, May 7, 2014

8.Malarndhirukka Virumbu.( Mugam )

மலர்ந்திருக்க விரும்பு (முகம்)


   மலர்ந்திருக்கும் மலர்களைக் கண்டவுடன்,காணும் மலர்களும் அதாவது

மனிதர்களது முக மலர்களும் இன்னும் விகசித்து, மிக அழகாக,மிகப்

பிரகாசமாக மலரும்.இது இயற்கை.இயற்கையாக மலரும்  முக மலர்கள்

கூட இயற்கையாக மலரும் மலருக்கு ஈடான  அழகானவை.

 
   காலையில் எழுந்தவுடன்,அந்த நாளின் சகல செயல்பாடுகளையும்

இறைவனின் நேரடிக் கண்காணிப்பில் விட்டுவிட்டு மனதை

இலகுவாக்கிக்கொள்ள பழகுதல் சாலச் சிறந்தது.அப்பொழுது மனது

இலேசாகும்.அதற்கு சிந்தித்து செயல்பட வாய்ப்புக்கள் அதிகம்.அது மட்டும்

அல்லாது,நம் மனது நம்பிக்கைக்கும்,மரியாதைக்கும் உரியவர்களின் கீழ்

நாம் பணிப் புரிகிறோம் என்று அதற்கு புரிய வைத்து விட்டால் அது

பயபக்தியுடன்,ஒரு எச்சரிக்கை உணர்வுடன் ஆனந்தமாக செயல்படத்

 துவங்கும்.மனம் மலரும்.மனம் மலர முகம் மலரும்.


   மலர்ந்த முகத்திற்கு மற்ற முகங்களையும் மலர வைக்கும் அபார சக்தி

உண்டு.இல்லத்திலும், உறவினர்கள்,நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்திலும்

அந்த என்றும் இயற்கையாக மலர்ந்திருக்கும் முகத்தின் மேல் ஒரு மரியாதை

பிறக்கும்.நம்பிக்கையை வளர்க்கும்.நெருக்கத்தை ஏற்படுத்தும்.இரு

பக்கத்திலும் நன்மைகள் பல வந்து சேரும்.


  இன்னொருப் புறம் நோக்கின்,மலர்ந்த முகத்தின் முதல் காரணம் முக்கியக்

காரணம் அதன் அகம் பூரணமாக மலர்ந்திருப்பதுதான்.அதன் காரணமாக நம்

உடலின் அகம், புறம் இதன் செயல்பாடுகள் எந்த வித இடர்பாடுகளின்றி

சீராக செயல்படும்.இதன் விளைவாக எந்த விதமான நோய் நொடியும்

நம்மை அண்டாது.நமது உடலும் மனதும் தத்தம் ஆரோக்கியத்தை

பாதுகாத்துக் கொள்ளும்.ஆரோக்கியமான உடலும் மனதுமே நிகரற்ற

செல்வம் என்பதுதான் அனுபவ உண்மை.


   மலர்ந்த முகமும் அதற்கு காரணமான மலர்ந்த மனமும் எந்த விதமான

பிரச்சினைகளையும் இலகுவாக்கி அதற்கான தீர்வுகளையும் எளிதாக

இனம் கண்டுக் கொள்ளும்.இதன் விளைவாக ஒவ்வொரு குடும்பத்திலும்

நிரந்தரமான மகிழ்ச்சி நிலவும்.


   இதனை கண்டு வளரும் நம் குழந்தைகளும் இந்த நல்ல குணத்தைப்

பின்பற்றி,தாங்கள் தங்களால்,தங்களுக்கும், மற்றவர்களுக்கும் எந்த ஒரு

பிரச்சனையும் ஏற்படாமல்,உருவாக வாய்ப்புத் தராமல் வாழக் கற்றுக்

கொள்வர்.


   இதனால் மலர்ந்த முகத்தின் பிரகாசமான பக்கங்களை புரிந்துக் கொண்டு

என்றும் அன்றலர்ந்த மலர்கள் போல வலம் வருவதுச் சால சிறந்தது.


       


   

Friday, May 2, 2014

7.Vaigarai Thuyil eza virumbu.

7.வைகறை துயிலெழ விரும்பு


   கதிரவன் தன் கதிர்கள் பளீரிட விழிக்கும் முன் நாம் விழித்து அவனை எதிர்

கொண்டு வரவேற்றால் அந்த கதிரவனுக்குதான் எத்தனை மகிழ்ச்சி.அதுவும்

சேவலின் மேல் கதிரவனுக்குத் தனிப்  பிரியம்.ஏனென்றால் ஊருக்கு

முன்னால் அந்த அழகான சேவல்தானே அவனை பிரியமுடன்

ஆனந்தமாக வரவேற்க முதல் ஆளாக நிற்கிறது.


    நாமும் சேவலுடன்  சேர்ந்து, அதிகாலையில் எழுந்து அந்த அழகான

கதிரவனை  ஆனந்தமாக வரவேற்க நின்றால்,அவன்தான் எத்தனை

மகிழ்ச்சியுடன்,எத்தனை அழகழகான காட்சிகளை  நமக்கு காண்பித்து

குதூகலிக்கிறான்.அழகான பனித்துளி முதல்  பச்சைப்பசேலென நம்மை சுற்றி

நிற்கும் மரம் செடிக் கொடி வகைகளின்  அசைந்தாடும் அழகையும்,,அந்த

மரங்களில் கூடுக் கட்டிக் குடியிருக்கும் பல வகை  பறவைகள் தத்தம் உற்றார்

உறவினர்களை தத்தம் பல வகை இனிய குரல்களால் எழுப்பி

ஒன்றாக  இரைத் தேடப் புறப்படும் அழகையும்,பலதரப்பட்ட மனிதர்கள்

புத்துணர்ச்சியுடன் தத்தம் பணிகளை கவனிக்க விரையும் அழகையும்,இதுவே

கிராமமாக இருந்தால்,கால்நடைகள், தத்தம் பந்தங்களையயும,அக்கம்

பக்கத்து தமது நண்பர்களையும்,அன்பால் அழைக்கும் ஒலியினையும் நம்மை

காணவைத்து,கேட்க வைத்து நம்மை மகிழ்ச்சியுறச் செய்கிறது.

 
   அதிகாலை வரை அதாவது சூரியன் உதிக்கும் வரை நாம் உறங்கும்

உறக்கம்தான் உண்மையான உறக்கம்.புத்துணர்ச்சித் தரும் ஆரோக்கியமான

உறக்கம்.கண்களிரண்டும் பளீரென்று தெளிந்து விடும்.மூளையும் முழு

ஓய்வுப்  பெற்று,சிந்தனைகள் ஆரோக்கியமானவையாக  இருக்கும்.இதயம்

இதமாக செயல்படும்.நாள் முழுவதும் நம்மை புத்துணர்ச்சியுடன் செயல்பட

வைக்கும்.


   உங்களால் உங்களுக்கும்,உங்கள் மனதிற்கும் ஒரு ஆரோக்கியமான நட்பை

நடைமுறைப் படுத்த முடியுமெனில்,உங்களுக்கு மணியடித்து எழுப்பும்

கடிகாரத்தின் அவசியம் இருக்காது.உங்களது கூர்ந்த மனமே உங்களை நீங்கள்

குறிப்பிடும் நேரத்திற்கு எழுப்பிவிடும்.


   நீங்கள் காலையில் ஒருக்  குறிப்பிட்ட நேரத்தில் எழுந்து உங்களைப் பழக்கப்

படுத்திக் கொண்டால்,இரவிலும் ஒருக் குறிப்பிட்ட  நேரத்தில் உறக்கம்

உங்களைத தழுவிக் கொள்ளும்.ஆழ்ந்த உறக்கம்தான் நம் உடலுக்கும்

மனதிற்கும் போதிய ஓய்வைத் தருவதால்,நம் ஆரோக்கியம் ஒரே சீராக

இருக்கும்.


   மேலும் எண்ணிப் பாருங்கள்.தினமும் காலையில் நாம் எழும் நேரத்திற்கு

 ஒரு அரை மணி நேரம் முன்பாக எழும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால்,

அந்த அதிகப்படியான நேரத்தை கணக்கில் கொண்டால்,ஒரு மாதத்தில் " 15 "

மணி நேரம் நமக்கு அதிக நேரமாக கிட்டும்.அந்தப் பொன்னான நேரத்தை

சரியாக, சாதுரியமாகப்  பயன்படுத்தக் கற்றுக் கொண்டால்,அதனை

செல்வமாக மாற்றிக் கொள்ளுள் வாய்ப்புக்கள் அதிகம்.


  நேரம்.அதை நாம் நேசமாக்கிக் கொள்ள வேண்டும்.அப்பொழுதுதான் அது

வீணாவது தடுக்கப்படும்.நேரத்தின் அருமையை நாம் புரிந்துக் கொள்ள

வேண்டுமெனில்,நாம் இன்னும் ஒரு முக்கியமான நமக்குத் தெரிந்த

உண்மையை நினைவுக் கொள்ள வேண்டும்.அதாவது நேரத்தை கடனாகத்

தரவோ, பெறவோ முடியாது.சேர்த்து வைக்கவும் முடியாது.எனவே

சாதுரியமாக உபயோகிக்கத் தெரிந்தால் மட்டுமே,நம் வாழ்க்கையை

அர்த்தமுள்ளதாக்கி,அதில் சகல செல்வங்களின் உயரத்தையும் கூட்டிக்

கொண்டே செல்ல முடியும்.அதிகாலையில் இரைத் தேடபுறப்பட்டுச்

செல்லும் " முதல் " பறவைக்கே  அதிக இரைக் கிட்டும் என்பது அனுபவ

உண்மை.