Saturday, October 14, 2017

32.Thai Mann.

       செல்லம்மா எதிர்பார்த்தபடியே அடுத்த ஒரு வாரத்தில் அந்த சினிமா

பைத்தியம் குள்ளமணியின் குடும்பம்,அதன் ஆணி வேரோடு ஐக்கியமானது.

காரணம்,வேறென்னாவாக இருக்க முடியும்?.குள்ளமணியின் கணவன்,மிக

பிரகாசமாகத் தெளிந்ததால்,எல்லா விஷயங்களும்,மிக எளிதாக,மிக நலமாக

மிக நன்றாகவே முடிந்தது.சான்றோர்கள் காலங்லகாமாக நமக்கு  திரும்பத்

திரும்ப அறிவுறுத்துவது என்ன?. அறியாமைதான் சகல துன்பங்களுக்கும்

காரணம் என்றுதானே!.அது எந்த வகை அறியாமையாக இருந்தாலும்,அந்த

அறியாமை நம்மிடம் இருக்கும்வரை, நமக்கு நாமேதான் பலதரப்பட்ட

இன்னல்களை வரவழைத்துக் கொண்டிருக்கிறோம் என்பது நிதர்சனத்திலும்

நிதர்சனம்.அது அந்த குள்ளமணியின் கணவனுக்கு மிக தெளிவாகவேப்

புரிந்தது.தெளிவின் வெளிச்சத்தில் அவன் தன் தவறை திருத்திக் கொள்வதில்

இன்னும் தெளிவானான்.


     அந்த திரு.குள்ளமணி தன் குடும்பத்துடன் ஆதர்சத்துடன் ஐக்கியமான

அந்த நல்ல நாளுக்கு பின், ஒரு நல்ல மனிதரின் மரியாதையை மதிக்க

தெரியாமல்  அவரது மரியாதைக்கு பங்கம் ஏற்படுத்த  இருந்த அவரது

வாரிசை சந்திக்க சமயம் பார்த்துக் காத்திருந்தான்.அது வேறு யாரும்

இல்லை.செல்லம்மாவின் இரண்டாவது அண்ணன்தான்.அதற்கு சரியான

ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது.அன்று பக்கத்து ஊரில் மாதம் ஒரு முறை

நடக்கும் பெரிய சந்தைக்கு இருவரும் ஒன்றாக போகும் வாய்ப்பை

திரு.குள்ளமணி ஏற்படுத்திக் கொண்டான்.செல்லம்மாவின் தமையனும்

அதற்காகத்தான் காத்திருந்தவன் போல இவனுடன் சேர்ந்து கொண்டான்.


      ஊரை விட்டு சிறிது தூரம் சென்றதும்,இருவரும் மனம் விட்டு பேசத்

துவங்கினர்.திரு.குள்ளமணி எப்படி விஷயத்தை ஆரம்பிப்பது என்று

ஆராய்வதற்குள்,செல்லம்மாவின் தமையன் நிதானமாக ஆரம்பித்தான்.

" அண்ணே ! நீங்க திரும்பவும் ஒண்ணுக்குள்ளே ஒண்ணு ஆனதிலே எனக்கு

ரொம்ப சந்தோஷம் அண்ணே !.அதற்கு என் தங்கச்சி செல்லம்மாதான்

காரணம்னு எனக்கு நல்லாவே தெரியும்.என் தங்கச்சிக்கு  எல்லாருக்கும் ,

எல்லாத்தையும் தெளிவாக்கற ஒரு பெரிய சக்தி இருக்கண்ணே !எங்க

வீ ட்டு உசுரே அவதான்னு எனக்கு இப்பத்தாண்ணே தெளிவாச்சு.அவ எங்க

வீட்டல வந்து பொறந்ததுக்கு நாங்க எல்லோரும்  ஏதோ பெரிய புண்ணியம்

 பண்ணியிருக்கோம்னு தோணுது அண்ணே ! ".


      " ஆமா தம்பி ! நிச்சயமா நீங்க எல்லோரும் பெரிய புண்ணியம்தான்

பண்ணியிருக்கணும்.எனக்கு என்ன தோணுதுன்னா,நீங்க மட்டுமில்லை தம்பி

! நம்ப  ஊரே ஏதோ பெரிய புண்ணியம் பண்ணியிருக்கணும்.இல்லேன்னா

நம்ப ஊருக்கே இப்படி ஒரு ஐயனாரு பொண்ணு மாதிரி பொறந்திருப்பாளா !

என்ன விவேகமான விவரம்:அவ முன்னாடி எனக்கு நானே ஒரு தூசி

மாதிரிதான் தெரியறேம்பா.இப்படி வெவரம் கெட்டு போய்

நின்னிருக்கோமேன்னு  ரொம்பவே விசனம் பட்டு போனேன் தம்பி !".

திரு.குள்ளமணியின் குரலில் உண்மையான வருத்தம் மேலோங்கியிருந்தது.

" ஆனாலும் தம்பி !செல்லம்மா சொன்னதற்கு அப்புறம்,என் வீட்டுக்காரி

எம்புட்டு பெரிய ஈனக் காரியம் பண்ண இருந்தாள்னு தெரிஞ்சதும் ஆடி

போய்ட்டேன் ! நீயும் என்னை மாதிரி விவரம் புரியாமே நிலை

தடுமாறிட போறியோனு ரொம்பவே கலங்கி போய்ட்டேன்.அப்புறம் உங்க

அப்பா முகத்தை என்னாலே  ஏறிட்டுதான் பாக்க முடியுமா சொல்லு.

அதனாலேதான் உன்னை எச்சரிக்கலாம்னுதான் அதற்கான சந்தர்ப்பத்தை

எதிர்பார்த்துக்கிட்டு இருந்தேன்.இப்பதான் அதற்கான சந்தர்ப்பம் கிடைச்சது.

ஆனால் அதற்கு தேவையே இல்லாமே நீ ரொம்பவே தெளிவா இருக்கே.

எனக்கு இப்பதான் போன உயிர் திரும்பிடுச்சுன்னு வச்சுக்கோயேன் ".


   " அண்ணே ! நீங்க வேறே ! என் வீட்டுக்காரி பேச்சுக் கேட்டு எம்மனசும்

ஒரு நிமிஷம் நிலை தடுமாறித்தான் போச்சு.ஆனா சமயத்திலே எங்க

செல்லம்மா என்னை கடுமையா எச்சரித்தாளோ! ,நான் முழிச்சிகிட்டேனோ!

போதுமடா சாமி ! நா மட்டும் என் வீட்டுக்காரி பேச்சை கேட்டு ஏதாவது எக்கு

தப்பா நடந்திருந்தேனா !,அந்த நினைப்பே சித்திரவதையடா சாமி! ".


   
            அந்த சித்திரவதையைத்தானே  திரு.குள்ளமணி மிக நன்றாகவே

அனுபவித்திருந்தான்.அந்த சித்திரவதையின் தாக்கம் , அந்த தாக்கத்தின்

 ஆழம் ,அவனுக்கு அவன் காலத்திற்கும் போதுமானதாக இருந்தது.

ஆனால் அந்த வலியிலும் ,வழி தவறி போய் விட்டோம் என்பது கூட

தெரியாமல் மேலும்,மேலும் தன் வழியை சிக்கலில் சிக்க வைத்துக்

கொண்டிருந்த அவனுக்கு  செல்லம்மா சரியான பாதையின் சரியான

புள்ளியை  மனதில் பதிய விட்டது ஒரு பெரிய பாக்கியமாக அமைந்து

போனது.இல்லை என்றால் அவன் இழக்க போகின்ற பாக்கியங்கள்

கொஞ்சமா ? நஞ்சமா ? அவன் அந்த வலியையும்,அந்த வலிக்கு ஒத்தடமாக

செல்லம்மா தந்த இதத்தையும் செல்லம்மா  வீட்டு  ஜீவனுடன் பகிர்ந்து

கொண்டான்.பகிர்தலில்தானே சகல சந்தானங்களும் வரிசை கட்டி

நிற்கும்.








               
                                                                                    தொடரும்......................


No comments:

Post a Comment