Monday, October 9, 2017

29,Thai Mann.

       செல்லாம்மா என்றும் போல அன்றும் கொட்டடியில் பசுக்களுக்கான

பணிகளில் ஆத்மார்த்தமாக ஈடுப்பட்டிருந்தாள்.அப்பொழுது, அவளது சின்ன

அண்ணனும்,அண்ணியும் சுற்றும் முற்றும் பார்த்தபடி தயங்கி,தயங்கி

செல்லம்மாவிடம் வந்தார்கள்.அவர்களது பாவனைகள் யாவும் ரசிக்கத்

தக்கதாக  செல்லம்மாவுக்கு தோன்றவில்லை.அவர்களை ஏறிட்டுப் பார்த்து

விட்டுத் தன வேலையத் தொடர்ந்தாள்.


      முதலில் அண்ணிதான் பேச்சை மிகவும் தயக்கத்துடன் ஆரம்பித்தாள்.

" செல்லம்மா!உங்கிட்டே ஒண்ணு கேட்கலாம்னு வந்திருக்கோம்;உனக்கு

சரின்னு பட்டது அப்படின்னா,வீட்டிலே பெரியவங்க கிட்ட பேசி எங்களுக்கு

ஒரு நல்ல முடிவா சொல்லு" என்றவள் ஒரு பயம் கலந்த தயக்கத்துடன்

செல்லாம்மாவை ஏறிட்டு பார்த்தாள்.செல்லம்மா அண்ணியை உற்றுப்

பார்த்ததும் சின்ன அண்ணிக்கு உதறல் எடுப்பது வெளிப்படையாகவே

தெரிந்தது.செல்லம்மாவிற்கு அவர்களது இந்த அணுகுமுறை சரியாகவே

படவில்லை.அவளுள் ஒரு எச்சரிக்கை மணி ஒலித்திருக்க வேண்டும்.

நன்றாக திரும்பி தன் சின்ன அண்ணியை உற்றுப் பார்த்தாள் செல்லம்மா.

அவள் நின்ற தோரணையே வந்த இருவரின் வயிற்றிலும் புளியைக்

கரைத்தது.ஒரு நிமிடம் எதுவும் பேசாமல் திரும்பி விடலாமா என்று அவர்கள்

யோசிப்பது நன்றாகவே புரிந்தது.


      " சின்ன அண்ணனும்,அண்ணியும் சேர்ந்து வந்திருக்கிறதை பார்த்தால்

வந்த விஷயம் பெரிய விஷயம் போலத்தான் இருக்கிறது.ம்ம்... விஷயம்

என்னன்னு சொல்லுங்க! "செல்லம்மா ஆரம்பித்து வைத்தாள்.சின்ன

அண்ணன் எதுவும் பேசவில்லை.ஆனால் அண்ணி சிறிது தைரியம்

பெற்றவளாய் சற்று முன்வந்து செல்லம்மாவின் கைப்பற்றி," அதில்லை

செல்லம்மா! அண்ணன் இனியும்,அப்பா கீழேயே எல்லா வேலையையும்

பார்த்துட்டிருந்தா அவருக்கும் எப்போது பொறுப்பு வரும் சொல்லு?அதான்

எங்களுக்குனு கொஞ்சம் நிலபுலன்களையும்,அந்த தோட்டத்து வீட்டையும்

வீட்ல பெரியவங்ககிட்டே பேசி வாங்கி ..."அண்ணி முடிக்கவில்லை

செல்லம்மா இடைமறித்து " கொடுத்துட்டா என் அண்ணன் உங்களுக்கு

கீழே பொறுப்பா தினம்,தினம் சினிமா பாக்குற வேலை செய்வாரு

அப்படித்தானே ! என்ன இது ?அந்த சினிமா பைத்தியம் குள்ள மணியோட

யோசனையாக்கும் ? ".சீறினாள் செல்லம்மா.அந்த சீற்றம்  வந்த இருவரையும்

வாயடைக்க வைத்தது.மேலே எதுவும் பேசாமல் செல்லம்மாவை விக்கித்து

பார்த்தவாறு நின்று கொண்டிருந்தார்கள்.


     செல்லம்மா வேறொன்றும் சொல்லவில்லை;தன் அண்ணிக்கு பின்னால்

நின்று கொண்டிருந்த தன் அண்ணனின் கையைப் பற்றி சற்று முன்னால்

இழுத்து அவன் முகம் பார்த்து  மிகத் தெளிவாக பேசினாள்." ஏண்ணே! ஒரு

பொண்ணு புகுந்த வீட்ல ஒரு நல்ல பெண்டாட்டியா எல்லா விதத்திலும்

புருஷனுக்கு பின்பலமா  நிக்கணும்;  முன்னாலே புருஷன் நின்னு கம்பீரமா

வேலை பாக்கணும்: பிறந்த வீட்ல பொண்ணு கம்பீரமா வலம் வரணும்;

அதற்கு  அவள் புருஷன் அவளுக்கு எல்லா விதத்திலும்  பின்பலமா

நிக்கணும்ணு நீ அண்ணிக்கு புரிய வைக்கலேயா? ".அண்ணன் எதுவும்

பேசவில்லை;அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். " அது சரி! உனக்கு அது

புரிஞ்சிருந்தாதானே நீ அண்ணிக்கு புரிய வைச்சிருப்பே! அதை நம்ப

அப்பா,அம்மாவையும்,நம்ப பெரிய அண்ணன்அண்ணியையும் பார்த்து

கத்துக்கிட்டிருக்க வேண்டாமா? எல்லார்கிட்டயும்இருக்குற

மாதிரி அறிவு,அறிவுன்னு  ஒண்ணு உங்கிட்டேயும் இருக்குணும்-

-தானே! அது கூட உனக்கு சரியான சகவாசம் உண்டா? இருந்திருந்தா அது

தப்பே பண்ணாதே;உன்னை சரியான வழியிலே இல்ல கூட்டிட்டு

போயிருக்கும்?".


          அந்த சின்ன அண்ணனுக்கு தன் எதிரில் நிற்கும் தங்கை,

தங்கையாக தெரியவில்லை.தாயாகத் தெரிந்தாள்.அவளது சாடலின் உச்சம்

அவளுக்கு தன்மேல் உள்ள அக்கறையின் உச்சிப்படி என்பது தெரிந்தது.இது

வரை செயலற்று இருந்த அவனது அறிவின் ஊற்றுக்கண் திறந்து

வெள்ளமாய்  பெருக்கெடுத்து ஓடியது.அது அவனது கண்களில் நிதர்சனமாக

தெரிந்தது.


         அதன் பிறகு அவன் வேறொன்றும் பேசவில்லை,திரும்பி மனைவியை

பார்த்தான்.திரும்பி தங்கையை பார்த்தான்.தன் அன்புத் தங்கையின்  முகத்தை

தன்  இரு கைகளால் ஒரு மலரை தாங்குவது போல தாங்கி கண்மூடி  உச்சி-

-முகர்ந்தான்.தன் மனைவி பின் தொடர அவ்விடம் விட்டு அகன்றான்.




                                                                                                   
                                                                                                         தொடரும்...........




No comments:

Post a Comment