இன்றைய கல்வி
குண்டுச் சட்டிக்குள்
குதிரை ஓட்டம்,சரிப்படுமோ?
சரி,இப்போது சரிப்படாது என்று
கல்வி முடிந்து சிலிர்த்து
எழ முயற்ச்சிக்க எனது,ஆம்
எனது இயல்பே மறந்து போய்
புரியாதப் புதிராய் என்
எதிர்காலம்.திகிலாகி போனது.
மனிதம்
மனிதம் பேணு.மகத்துவமான
பண்பாடு அது.உலக அரங்கில்
பாரதத்திற்குத் தனியிடம்.காரணம்
அதனிடம் என்றும் எதற்கும் ஈரம்.
இயல்பு இயற்யாகைனால்
ஓசோனில் ஓட்டையாம்;
விளைவுகளாய் பலப் பல
பயமுறுத்தல்கள்.ஆனாலென்ன?
உனது ஒவ்வொரு பிறந்த நாள்
இனிப்பாக,ஒரு மரக்கன்று;
இயற்கை அன்னைக்கு.
குளிர மாட்டாளோ?
ஓட்டையை குறைக்க மாட்டாளோ?
தன்னம்பிக்கை
உன் இடம் உன்னிடம்;பயணம்
உயரமோ,தாழ் நிலமோ,
அவ்வப்போது வந்து போ
உன்னிடமே;அது போதும்
சகலமும் அதனதன்
சரியான பாதைகளில்.
ஒற்றுமை
ஊர் குருவி பருந்தாகாதாம்;
பருந்தாக எண்ணவும் ஏன் தடை?
சரிபோகட்டும்.பேசுவோர் பேசட்டும்;இதோ
பல ஊர் குருவிகள்,ஒன்றாகி,திடமாகி,
பருந்தாகி,இவ்வுலக பந்தையே
அசைத்துக் காட்டுகிறதே!
நேரம்
நேரமில்லை;நேரம்
காணவில்லை;அட! இது
நேர்மையான வாதமில்லை;
நேரத்தின் முகத்தை நேரெதிரே
காண அதற்கு முன்னல்லவா
செல்ல வேண்டும்.
கடவுள் மொழி
கடவுள் எங்கே? கருணை எங்கே?
எனப் புலம்புவோரே! கடவுளின்
கருணை புரிபடவில்லை எனில்,
தவறு நம்மீது .எதில்?அவனது
மொழியை சரியாக,மிகச் சரியாக,
மொழிப் பெயர்ப்பதில்.
நேர்மறை மனம்
ஒன்றை நினை;அதுவும் நல்லதாக;
அதையே நினை, திரும்பத் திரும்ப;
அது ஆழமாகும்;அதுவும் தானாக;
நம் முயற்சியும் தீவிரப்படும்;பிறகென்ன?
ஆழமான நல் விதை வீணாகாமல்
விஸ்வரூப விருட்சமாகும்;இது விதி;
உலக நியதி;இதனை நம்பு நீ.