Saturday, October 21, 2017

33. Thai Mann.

     காந்தி தாத்தா,செல்லம்மாவின் இயற்கையான சுபாவத்தைப் பற்றி இப்படி

பல விஷயங்கள் மூலம் தெளிவுப் படுத்தி கொண்டே வந்த போது ,

விஜயனுக்கு தன் மருமகள் மேல் இருந்த புரியாத புதிர் விடுபட்டுக் கொண்டே

வந்தது.செல்லம்மாவின் ஒரே சித்தாந்தம்,ஒன்றே ஒன்றுதான்.எல்லோரும்

ஒண்ணா இருக்கணும்;நல்லா  இருக்கணும்;இப்போதைய தொழில் நுட்ப

வளர்ச்சியில் எல்லாமே சாத்தியம்தான்.ஆனால் அதற்கு ஒரு தெளிவுப்

பெற்ற மனம் வேண்டும்.எல்லோரும், நான்,நான் என்று தன்னை தானே

பார்த்துக்  கொண்டிருப்பதில்,அறியாமைதான் மிதமிஞ்சி  நம்மை ஆட்-

-கொண்டிருக்கிறது.இதனால், நாம் எத்தனை எத்தனை அகம் ,புறம், நிதி

சந்தானங்களை  இழந்து கொண்டிருக்கிறோம் என்பதை யாரும் புரிந்து

கொள்ள தயாராக இல்லை. புரிந்து கொள்ள முயன்றால்தானே அந்த

சந்தானங்களை தக்க வைப்பதற்கான முயற்சியும் இருக்கும்.



         இப்போதுதான், தன் நிலையை பூரணமாக உணர்ந்து கொண்டான்

விஜயன்.தன்னை, தனக்கு உணர்த்திய  செல்லம்மாவை தன் மானசீக

குருவாக  நிறைந்த மனதுடன்  மனமாற   ஏற்றுக் கொண்டான்,

செல்லம்மாவிற்கு குருவாக இருக்க வேண்டிய செல்லம்மாவின்  தாய் 

மாமன் விஜயன்.



           அன்றும் எப்போதும் போல விஜயனிடமிருந்து வந்திருந்த கடிதத்தை

அயல் மண்ணில், விஜயனின் குடும்பம் மிகுந்த ஆவலுடன் படித்துக்

கொண்டிருந்தது. செல்லம்மாவை பற்றிய விஜயனின் மனநிலையே

அவர்களுக்கும் பற்றிக் கொண்டிருந்தது.பரிசுத்தமான மனதின் விவேகம்,

உலகின் எந்த பகுதியையும் ஸ்பரிசிக்கும் சக்தி உடையது. அந்த சக்தியை

விஜயனின் கடிதத்தை ஸ்பரிசிக்கும்போதே விஜயனின் மொத்த குடும்பமும்

பூரணமாக உணர்ந்தது.



          அன்று வந்த கடிதத்தில்,செல்லம்மா சம்பந்தபட்ட இன்னொரு

நிகழ்ச்சியைபற்றிய  விவரணம் இருந்தது. அன்று எப்போதும் போல ஒரு

மாலை நேரத்தில்தன் வேலைகளை எல்லாம் தன் இடத்தில் முடித்து விட்டு

தன் பாட்டிவீட்டுக்கு  வந்து கொண்டிருந்தாள் செல்லம்மா. வயல் வரப்புகளின்

மேல் நடந்து வந்துகொண்டே,தன் பாட்டி ஊரின் பரந்த வயல் பரப்புகளை

பாசத்தோடு பார்த்துரசித்தபடி வந்து கொண்டிருந்தாள்.மாலை நேரகதிரவனின்

செந்நிறஒளியிலும்,அதன் கதகதப்பிலும்,பயிர்கள் எல்லாம் ஆனந்தமாக

நடனமாடிகொண்டிருந்தன. செல்லம்மாவிற்கு விவசாயம் என்றால்உயிர்.தன்

ஊரிலும்  சரி, தன் பாட்டி ஊரிலும் சரி, விவசாய வேலைகளிலும்,அறுவடை

சமயங்களிலும்,சமயத்திற்கு ஏற்றவாறு,இரு ஊரார்க்கும் ஒரு கை

கொடுப்பாள்.படுக்கை ஆகி விட்டவர்களையும்,தவழும் குழந்தைகளையும்

தவிர ஒருவருமே வெறுமனே சுற்றிக் கொண்டிருக்கக் கூடாது.அவர்கள்

எப்பேர்ப்பட்ட உத்தியோகத்தில் இருந்தாலும் சரி;ஏதாவது ஒரு விதத்தில்

விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.இது செல்லம்மாவின்

எழுத படாத ஆணித்தரமான சட்டம்.


      இதற்கு அவள் வைக்கும் வாதம்,"என்னென்னவோ குறையுடன் மக்கள்

பிறக்கிறார்கள்.ஆனால் வயிறு இல்லை என்ற குறையுடன் பிறக்கிறார்களா ?

வாழ்க்கையை,ஆண்டு அனுபவித்து வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற

உத்வேகத்தை தருவதே வயிறுதானே ! எண்சாண்  உடம்புக்கு வயிறுதானே

பிரதானம்;அதனால் அவரவர் வயிற்றுக்கு ஏதாவது ஒரு விதத்தில்

விவசாயத்திற்கு  உறுதுணையாக இருப்பது ஒவ்வொருவரின் தார்மீக

கடமையாகும் " என்பது  அவளது அசைக்க முடியாத வேரூன்றிய எண்ணம்.


          இப்படிப்பட்ட செல்லம்மா விவசாயத்தை எப்படி நேசிக்கிறாள்  என்பது

உள்ளங்கை நெல்லிக்கனியாய் இரு ஊரார்க்கும் தெளிவாய் புரிந்த விஷயம் .

சுற்றும்முற்றும் பார்த்தபடி வயல்களின் அழகை ரசித்தபடி வந்து கொண்டு

இருந்தவள்,  தூரத்தில் ஒரு காட்சியை கண்டுத் துணுக்குற்றாள்.






                                                                                                     தொடரும்.................  

No comments:

Post a Comment