செல்லம்மாவிற்கு இந்த சின்ன அண்ணனின் இந்த விஷயத்தை இப்படியே
விடுவது சரியாக படவில்லை.எய்தவள் இருக்க அம்பை நோவதில் எந்த
பயனும் இல்லை.நேராக அம்பை எய்தவளிடம் சென்றாள்.
செல்லாம்மாவை சிறிதும் எதிர்பார்க்காத அந்த அம்பு எய்த அம்மணி என்ன
சொல்வது அல்லது என்னதான் செய்வது என்று எதுவும் புரியாமல்
வெலவெலத்து போய் நின்றிருந்தாள். தான் எய்த அம்பு ஒரு பெரிய
விவகாரமாக உருவெடுத்து நிற்பது தெள்ளத் தெளிவாகப் புரிந்து போயிற்று.
ஆனாலும்,தன்னை உலுக்கிக் எடுத்துக் கொண்டிருக்கும் தன் உதறலைக்
கூடிய மட்டும் மறைத்தவாறு செல்லம்மாவை வாயார வரவேற்றாள்.
" என்ன செல்லம்மா! இப்பதான் இந்த அண்ணன்,அண்ணி ஞாபகம்
வந்ததாக்கும்;எங்க வீட்டு பக்கமெல்லாம் வர உனக்கு எங்கே நேரமிருக்கும்
சொல்லு?".குத்தலாக கேட்டாள் குள்ளமணி அண்ணி.அவள் சற்றுக்
குள்ளமாக இருப்பதால் ஊரில் எல்லோரும் அவளை அப்படித்தான்
அழைப்பார்கள்.
"ஆமா அண்ணி! உங்க வீட்டுக்கெல்லாம் வர எனக்கு நேரமே
இல்லைதான்; ஆனாலும்,நான் இங்கு வர ,நேரம் கண்டு பிடிச்சு வர மாதிரி
பண்ணிட்டிங்களே! சும்மா சொல்ல கூடாது;நீங்க பெரிய ஆளுதான்!"
பதிலுக்கு செல்லம்மாவும் குள்ளமணி அண்ணியை குதறினாள் .அந்த
குதறலில் குள்ளமணி அண்ணி குன்றிதான் போனாள்.
இவர்களது உரையாடல் சத்தம் கேட்டு,உள்ளிருந்து வெளியே வந்த
குள்ளமணியின் கணவனும், அவனது மூன்று குழந்தைகளும், வந்த
விருந்தாளி யார்? என பார்த்தவர்கள்,செல்லம்மாவை பார்த்ததும்
வியந்துதான் போனார்கள்.அவர்களில் மூத்தவன் பதினோராம் வகுப்பில்
அடி எடுத்து வைத்துள்ளான்.அவனுக்கும் எல்லோரையும் போலவே
செல்லம்மாவை மிகவும் பிடிக்கும்.ஆனால்,தன் அம்மாவின் பேச்சைக்
கேட்டு த் தன் அப்பா தனிக் குடித்தனம் வந்ததிலிருந்து,அவனுக்கு
செல்லம்மாவை தொலைவில் கண்டாலே தன் வழித் தடத்தை மாற்றி
விடுவான்.செல்லம்மாவும்,இந்த அளவிற்காவது பையன் தெளிவாக
இருக்கிறானே என்று அவனை எதுவும் சொல்வதில்லை.தனக்கு அண்ணன்
முறையாகும் அவனது அப்பனுக்கே புத்தி வேலை செய்யாத போது இந்த
பிஞ்சை நொந்துக் கொள்வதில் என்ன பயன்? ஆனால் இன்று வேறு
வழியில்லை.எல்லோரையும் ஒரு கை பார்த்து விட வேண்டியதுதான்.
செல்லம்மா,அவர்கள் எல்லோரையும் தீர்க்கமாக ஏறிட்டு பார்த்தாள்.
அந்த பார்வையின் தீட்சணயத்தை தாங்க முடியாமல்,அண்ணன்தான்
முதலில் வாய் திறந்தார். " என்ன செல்லம்மா ! இந்த பக்கம்?நான் இந்த
வீட்டுக்கு வந்து வருஷம் இரண்டாவுது.வந்து எட்டி பாக்கவேயில்லையே ?
அந்த வீட்டிலே இருக்குறப்போ அண்ணே!அண்ணே!னு உங்க
அண்ணன்களுக்கு சமமா எங்கிட்டே பரிவு காட்டுவே ;இப்ப என்னாச்சு?
வரதேயில்லேயே ?."அண்ணன் வாஞ்சையுடன் விசாரித்தார்.
" அடக் கடவுளே! இந்த அண்ணன் இப்படியா அப்பிராணியா இருக்கணும்?"
செல்லம்மா ஒரு நொடி அயர்ந்து போனாள் .சரி அது அவர் பிரச்சனை.அதை
அவரே புரிந்துக் கொண்டு சரி செய்தால்தான் உண்டு. நாம இப்ப
விஷயத்திற்கு வருவோம் என்று தீர்மானித்த செல்லம்மா ," அது சரி!நீ
எங்க நான் வரமாதிரி வச்சிருக்கே அண்ணே? "என்றாள்.அந்த குரலில்
அத்தனை கசப்பு. திடுக்கிட்டுப் போன அந்த அண்ணன்,பதறிப் போய் மேலும்
விசாரிக்கலானான் .
தொடரும்............
விடுவது சரியாக படவில்லை.எய்தவள் இருக்க அம்பை நோவதில் எந்த
பயனும் இல்லை.நேராக அம்பை எய்தவளிடம் சென்றாள்.
செல்லாம்மாவை சிறிதும் எதிர்பார்க்காத அந்த அம்பு எய்த அம்மணி என்ன
சொல்வது அல்லது என்னதான் செய்வது என்று எதுவும் புரியாமல்
வெலவெலத்து போய் நின்றிருந்தாள். தான் எய்த அம்பு ஒரு பெரிய
விவகாரமாக உருவெடுத்து நிற்பது தெள்ளத் தெளிவாகப் புரிந்து போயிற்று.
ஆனாலும்,தன்னை உலுக்கிக் எடுத்துக் கொண்டிருக்கும் தன் உதறலைக்
கூடிய மட்டும் மறைத்தவாறு செல்லம்மாவை வாயார வரவேற்றாள்.
" என்ன செல்லம்மா! இப்பதான் இந்த அண்ணன்,அண்ணி ஞாபகம்
வந்ததாக்கும்;எங்க வீட்டு பக்கமெல்லாம் வர உனக்கு எங்கே நேரமிருக்கும்
சொல்லு?".குத்தலாக கேட்டாள் குள்ளமணி அண்ணி.அவள் சற்றுக்
குள்ளமாக இருப்பதால் ஊரில் எல்லோரும் அவளை அப்படித்தான்
அழைப்பார்கள்.
"ஆமா அண்ணி! உங்க வீட்டுக்கெல்லாம் வர எனக்கு நேரமே
இல்லைதான்; ஆனாலும்,நான் இங்கு வர ,நேரம் கண்டு பிடிச்சு வர மாதிரி
பண்ணிட்டிங்களே! சும்மா சொல்ல கூடாது;நீங்க பெரிய ஆளுதான்!"
பதிலுக்கு செல்லம்மாவும் குள்ளமணி அண்ணியை குதறினாள் .அந்த
குதறலில் குள்ளமணி அண்ணி குன்றிதான் போனாள்.
இவர்களது உரையாடல் சத்தம் கேட்டு,உள்ளிருந்து வெளியே வந்த
குள்ளமணியின் கணவனும், அவனது மூன்று குழந்தைகளும், வந்த
விருந்தாளி யார்? என பார்த்தவர்கள்,செல்லம்மாவை பார்த்ததும்
வியந்துதான் போனார்கள்.அவர்களில் மூத்தவன் பதினோராம் வகுப்பில்
அடி எடுத்து வைத்துள்ளான்.அவனுக்கும் எல்லோரையும் போலவே
செல்லம்மாவை மிகவும் பிடிக்கும்.ஆனால்,தன் அம்மாவின் பேச்சைக்
கேட்டு த் தன் அப்பா தனிக் குடித்தனம் வந்ததிலிருந்து,அவனுக்கு
செல்லம்மாவை தொலைவில் கண்டாலே தன் வழித் தடத்தை மாற்றி
விடுவான்.செல்லம்மாவும்,இந்த அளவிற்காவது பையன் தெளிவாக
இருக்கிறானே என்று அவனை எதுவும் சொல்வதில்லை.தனக்கு அண்ணன்
முறையாகும் அவனது அப்பனுக்கே புத்தி வேலை செய்யாத போது இந்த
பிஞ்சை நொந்துக் கொள்வதில் என்ன பயன்? ஆனால் இன்று வேறு
வழியில்லை.எல்லோரையும் ஒரு கை பார்த்து விட வேண்டியதுதான்.
செல்லம்மா,அவர்கள் எல்லோரையும் தீர்க்கமாக ஏறிட்டு பார்த்தாள்.
அந்த பார்வையின் தீட்சணயத்தை தாங்க முடியாமல்,அண்ணன்தான்
முதலில் வாய் திறந்தார். " என்ன செல்லம்மா ! இந்த பக்கம்?நான் இந்த
வீட்டுக்கு வந்து வருஷம் இரண்டாவுது.வந்து எட்டி பாக்கவேயில்லையே ?
அந்த வீட்டிலே இருக்குறப்போ அண்ணே!அண்ணே!னு உங்க
அண்ணன்களுக்கு சமமா எங்கிட்டே பரிவு காட்டுவே ;இப்ப என்னாச்சு?
வரதேயில்லேயே ?."அண்ணன் வாஞ்சையுடன் விசாரித்தார்.
" அடக் கடவுளே! இந்த அண்ணன் இப்படியா அப்பிராணியா இருக்கணும்?"
செல்லம்மா ஒரு நொடி அயர்ந்து போனாள் .சரி அது அவர் பிரச்சனை.அதை
அவரே புரிந்துக் கொண்டு சரி செய்தால்தான் உண்டு. நாம இப்ப
விஷயத்திற்கு வருவோம் என்று தீர்மானித்த செல்லம்மா ," அது சரி!நீ
எங்க நான் வரமாதிரி வச்சிருக்கே அண்ணே? "என்றாள்.அந்த குரலில்
அத்தனை கசப்பு. திடுக்கிட்டுப் போன அந்த அண்ணன்,பதறிப் போய் மேலும்
விசாரிக்கலானான் .
தொடரும்............
No comments:
Post a Comment