Sunday, September 24, 2017

24.Thai Mann.

       மேலும் ஒரு வாரம் போனது.விஜயனின் நிலைமை அவனது தாய்க்கு

புரிந்து போனது.பேத்திக்கும்தான்.ஒரு நாள் மாலை பேத்தி வருவதற்கு முன்

தன் மகனிடம் இதைப் பற்றி பேச முடிவெடுத்து,பேச்சைத் தொடங்கினார்

தாய். " ஏன் தம்பி ! இன்னும் எத்தனை நாளைக்குதான் இப்படியே இருந்துற

முடியும்? தம்பியோட வேலையெல்லம் பாதிக்குமில்லே! தவிரவும்,

தம்பியோட குடும்பமும்   தம்பிய பாக்க தவிச்சுட்டு இருக்குமில்லே? ".


      "  ஆமா! தம்பியோட குடும்பந்தான் தவிச்சுட்டு இருக்கும் ! தம்பியோட

பெத்த ஆத்தா எப்படி போனா என்னா! எங்கிட்டு போனாத்தா என்ன?முந்துன

உறவையும்,பிந்துன உறவையும் தாய் மண்ணிலே ஒண்ணாக்க பாலமாகற

பொறுப்பை உதறி தள்ளிட்டு,அசலூருலே, மண்ணோடு மண்ணாகற

வரைக்கும், காசு பின்னாடியே  ஓடற பெரிய்ய்ய்ய பொறுப்பு மட்டும்தானே

இருக்கு?".

     " ஒம்பிள்ளைக்கு.பெத்தவங்க வேண்டாம்: கூட பொறந்த பொறப்பும்

வேண்டாம்.பொறந்த மண்ணும் வேண்டாம்.அது மண்ணாங்கட்டியாகவே

போகட்டுமே! நமக்கென்னா போச்சு?என்னவோ சாமி சொல்லிடுச்சுங்கறதை

போல,ஒலகத்து காசையெல்லாம் தன்னோட கைபையிலே போட்டதுக்கு

அப்புறம்தான் மறு வேலைன்ற மாதிரி அப்படி என்னா காசு பின்னாடி

கண்ணுமண்ணு தெரியாமை ஓடிட்டிருக்கு நீ பெத்த புள்ளை!நெசமாலுமே

எனக்கு எதுவும் புரியலே ஆத்தா!". பொரிந்துத் தள்ளினாள் ஆத்தாவின்

பேச்சை கேட்டுக்கொண்டே வந்த செல்லம்மா.அவள் குரலில் அத்தனை

வெறுப்பு மண்டி கிடந்தது.


      திரும்பி பார்த்த ஆத்தா ஆற்றாமையில் அரற்றினார்;என்னவென்று;

"அதுதான் செல்லம்மா எனக்கும் புரியலே! ".சப்த நாடியும் ஒடுங்கி போயிற்று

விஜயனுக்கு. பாட்டியும்,பேத்தியும் உள்ளே போய் வெகு நேரமாகியும் திக்

பிரமைப் பிடித்து போய் அமர்ந்திருந்தான் விஜயன்.பிறகு நேரம் பார்த்தான்.

மணி எழரை தாண்டிவிட்டது.வெளியே சிறிது காற்றாடி விட்டு வரணும்

போல இருந்தது.தாயிடம் சொல்லிவிட்டு வீட்டை விட்டு இறங்கினான்.

தெருவிற்கு வந்து இரு புறமும் பார்வையை படர விட்டான்.நிலா ஒளி

குளுகுளுவென்று ஒரு நிறைவான இதம் தந்தது.எங்கிருந்தோ வந்த

மலர்களின் கதம்பமான வாசம் விஜயனுக்கு புத்துயிரூட்டியது.


     " என்ன தம்பி! நிலா வெளிச்சத்திலே காத்தாட வந்தீங்களா? " அடுத்தத்

தெரு காந்தி சித்தப்பா அருகில் வந்தார்.அவரு எப்பவும்,காந்தியை பற்றியே

பேசிக் கொண்டிருப்பதால்,அவருக்கு ஊரில் அந்த பெயர்.வயது ஒரு எழுபது

எழுபத்தைந்து இருக்கும். அவருக்கு மார்கண்டேயன் என்று இன்னொரு

பெயரும் உண்டு. ஊரில் நிறைய பேர்,அவர்களுக்கு விவரம் தெரிந்த நாளில்

இருந்து இவருடைய தோற்றம் அப்படியேத்தான் இருக்கிறதாம்.அம்மா

சொல்ல கேள்விப்பட்டிருக்கிறான் விஜயன்.எப்போதும் ஒரு குறும்புத்தனம்

அரும்பிக் கொண்டிருக்கும் மலர்ந்த முகமாக இருப்பார்.ஆண்,பெண்

வித்தியாசம் இல்லாமல் எல்லா வயதினருடனும் இயல்பாய்,சகஜமாய்

அளவளவாடுவார்.பாசமும்,பரிகசிப்பும் நிறைந்த அவரது பேச்சிற்கு நடுவில்

வரம்பு தாண்டும் விஷயங்களில் குட்டவும் தவற மாட்டார்.குறு மொழியில்

மனது நிறைய செய்து விடுவாராம்.எல்லாம் அம்மா சொல்ல கேள்வி.

விஜயனும் பலமுறை அவரது இனிய சொல்லையும்,இனிய முகத்தையும்

சந்தித்து கடந்திருக்கிறான்.


      "  வாய்காலுக்கு தண்ணி திருப்ப போய்கிட்டு இருக்கேன்தம்பி !

 பேச்சுத் துணைக்கு வர முடிஞ்சா வாங்க!ஒரு மணி நேரத்திலே

திரும்பிடலாம்".வாஞ்சையோடு அழைத்தார்.விஜயனுக்கும்,அது,அந்த

" பேச்சுத் துணை " தேவையாக இருந்தது.அவரை உள்ளே அழைத்து

உபசரித்தான்.பேச்சு சத்தம் கேட்டு,அம்மாவும்,செல்லம்மாவும் வெளியே

வந்தார்கள்.அவரது குசல விசாரிப்பு,கேட்பவர் மனதை நிறைத்தது.அம்மா

ஏதாவது சாப்பிட சொல்ல வற்புறத்த,அவர் திரும்பி வருபோது சாப்பிடுவதாக

வாக்களித்துவிட்டு,விஜயனை அழைத்துக் கொண்டு கிளம்பினார்.


      வழி நெடுக அவர் சொன்ன விஷயங்கள் யாவும் விஜயனை ஒரு புது

உலகத்திற்கு அழைத்துச் சென்றன.




                                                                                                     தொடரும்.........






                                                                                           


        

No comments:

Post a Comment