Wednesday, September 20, 2017

20. Thai Mann.

    " புயலுக்குப் பின் அமைதி " என்று சாதாரணமாக கூறக்  கூடிய புயலா? வந்து

சென்றப் புயல்.அந்த புயலின் தோற்றமே " அச்சம் " என்ற சொல்லின் முழு

பரிமாணத்தை,தாய்,மகன் இருவரது மனதிலும் கருப்பு மையில் அச்சடித்தது

போல படிய வைத்து விட்டுப் போனது.அந்த ஆழமாக ,அழுத்தமாக ,மிகுந்த

ரணகள வலியுடன் படிந்து விட்ட அந்த கருப்பு மை அச்சை உணர்ந்த விஜயன்

சர்வ சக்தியையும் இழந்து சிலையாகி சமைந்து போனான்.அவனது தாயின்

நிலைமை விவரணைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது,


    நீண்ட நேர மயான அமைதிக்கு பிறகு விஜயனுக்கு ஒரு அடர் திரை விலகி,

தெளிவு பிறந்தது.எல்லாமே தெள்ளத் தெளிவாகின.இத்தனை ஆண்டுகளுக்கு

பிறகு, இத்தனை ஆயிரம் மைல்கள்  அப்பால் இருந்த தன்னை,அங்கு இருக்க

விடாமல்,தாய் மண்ணிற்கு சுண்டி இழுத்த சக்தி,இப்பொழுது  வந்து போனதே

இந்த புயலின் சக்திதான் என்பதை  அவனது உள்ளுணர்வு அவனுக்கு

உணர்த்தியது.


   அந்த மகா சக்தியின் மகிமையை உணர்ந்ததும்,விஜயன் தன்னை

சுதாரித்துக் கொண்டான்.அந்த சக்திக்கு தன் பாட்டியின் பால் கொண்டுள்ள

ஆழமான பரிவுதான்,அந்த அப்பழுக்கில்லாத பாசம்தான்,விஜயனின்

தலையாய பொறுப்பை உணர்த்தும் விதமாக அவனை கட்டி இழுத்து வந்து

அவனை தன்  தாயின்பால் சேர்த்திருக்கிறது.


   விஜயன் மனதின் வலிமையைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறான்.ஆனால்

இப்பொழுதுதான் அதன் வலிமையின் தீவிரத்தை,அதன் ஆக்ரோஷத்தை

நேரில் கண்டுக் கொண்டான்.அப்படியெனில் இத்தனை வலிமைப் பெற்ற

அந்த மனதில்,அது தன் பாட்டியின்பால் கொண்டுள்ள பாசமும் மிகவும்

வலிமையானதாகத்தான் இருக்க வேண்டும்.இந்த நிதர்சனத்தை சுளீரென

 சாட்டையடி வலியாய்  உணர்ந்தான்.தான் மறந்த அல்லது விலக்கிய தன்

தலையாய பொறுப்பை இந்த பிஞ்சு,தன் தோள் மீது சுமந்து,தன் பாட்டியின்

கௌரவத்தை கம்பீரமாக காத்து நின்றிருக்கிறது.தன்னை எண்ணி கூசிப்

போனான் விஜயன்.


   திரும்பி தாயை பார்க்க,அவனது தாய் அவனையே பார்த்துக் கொண்டு

இருந்தாள்.அதில் வேதனை மிகுந்திருந்தது.தன் மகனின் மரியாதையை

தன் பேத்திக் குன்ற செய்து விட்டாளே!தன் தாயின் பரிதவிப்பை உணர்ந்தான்

விஜயன்.எல்லா தாய்மார்களுக்கும் உள்ள நியாயமான பரிதவிப்புதான்.தன்

பிள்ளை எப்படிப் பட்டவனாயிருந்தாலும்,தன் கண் முன்னே யாரும்  தன்

மகனின் மரியாதைக்கு ஊரு விளைவிக்கக் கூடாது.என்னே ஒரு

தாய்மையின் நியாயத்தின் பெருமை.


    விஜயன் ஒரு முடிவுக்கு வந்திருப்பது போல தெரிந்தது,தன் தாயைப் பார்த்து

முறுவலித்தான்.அவனது தாய் அந்த முறுவலின் அழகை ரசிப்பது தெரிந்தது.

மெதுவாகத் தன்னை ஆசுவாசபடுத்திக் கொண்டான்  விஜயன்.





                                                                                      தொடரும்.............




No comments:

Post a Comment