அடுத்தநாள் முதல்,விஜயன்,தன் தாயிடம் சொல்லிவிட்டு,கிராமங்களின்
வயற் வரப்புகளில் நடை பயின்றான்.அவனது யோசனையில் எல்லாம் கடும்
சீற்றத்துடன் வந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டுச் சென்ற அந்த புயல்
நினைவாகவே இருந்தது.எத்தனை பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும்
அந்தப் புயலை நேசிக்காமல் இருக்க முடியவில்லை.
விஜயனின் தாய் எல்லாவற்றையும் விவரமாக சொன்னார்.தன் மகள்
வயிற்று பேத்தியின் அருமை,பெருமைகளை விலாவாரியாக சொன்னார்.
அக்காவின் கடைக் குட்டி.படுச்சுட்டி.பெயர் பாரதி என்கிற செல்லம்மாவாம்.
அந்த பெயர் காரணத்தினால்--தானோ என்னவோ,சிறுமைகளை பொறுக்காத
" அக்னி குஞ்சாக "இருக்கிறாள்.அக்காவின் வீட்டை, அக்காவும்,மாமாவும்
நிர்வகிப்பதில்லையாம்.இந்த அக்னி குஞ்சுதான் நிர்வகிக்கிறதாம்.
இந்த அக்னி குஞ்சுவின் ஊரும்,அதன் பாட்டியின் ஊரும் அருகருகில்
இருந்ததனால்,இதற்கு மிகவும் கொண்டாட்டமாக போய்விட்டது.இல்லை
என்றால்,அதன் பாட்டியின் பாடு திண்டாட்டமாக அல்லவா போயிருக்கும் ?
இது அதன் நிதர்சனமான வாதம்.தன் பாட்டி மீது ஏகத்திற்கு வாஞ்சை;
பாசம்;தன் பெற்றோர் மற்றும் தன் குடும்ப அங்கத்தினர்கள் ஒவ்வொருவர்
மீதும் உயிராக இருக்கிறதாம்.அவளுடைய அண்ணிமார்கள் இருவரும்
இவளிடம்தான் எல்லா நல்லது,நல்லது அல்லாத விஷயங்களையும் பகிர்ந்து
கொள்வார்களாம்.இருஊராருக்கும் செல்லப்பிள்ளையாம்.அதனால் இரு
ஊராரும் அவளைசெல்லமாக " செல்லம்மா " என்றே அழைக்கிராற்களாம்,
அம்மா சொல்ல,சொல்ல,விஜயனுக்கு செல்லம்மாவை மிகவும் பிடித்து
போனது.இந்தச் சுட்டிக் குழந்தையை பிறந்ததிலிருந்து,ஒரு தாய் மாமன்
ஸ்தானத்திலிருந்து அதன் குழந்தை பருவத்தை அங்குலம்,அங்குலமாக
ரசித்து, அதனுடன் ஆசை,ஆசையாய் விளையாடி,விரும்பியதல்லாம்
வாங்கித் தந்து,அழுதுக் கொண்டு வந்து நிற்கும் போதெல்லாம்,நான் " தாய்
மாமன் " இருக்கிறேன் என்று அன்பாய் அரவணைத்து, இன்னும் அதன்
ஒவ்வொரு பருவத்திலும்,அதற்கு எழும் எல்லா சந்தேகங்களையும்,வயல்-
-வரப்புகள் நடுவே கைப்பிடித்து அழைத்துக் கொண்டுச் சென்று,அதன்
வயதிற்கு ஏற்றவாறு புரியும்படி,சகல அங்க,அசைவுகளுடன் கதைகல் பல
சொல்லிக் கொண்டு செல்லும் அனுபவம்,அந்த வயல் வரப்பினூடே இந்த
மலர்செண்டு,அசைந்து,அசைந்து நடந்து வரும் அழகு,இன்னும் எத்தனை,
எத்தனையோ சந்தோஷங்களை இழந்த மிகப் பெரிய வருத்தத்தை விஜயன்
உணரலானான்.
இன்னும் சொல்லப் போனால்,தன் உடன் பிறந்த அன்பு சகோதரியின்
குழந்தைகளுக்கு ஒரு தாய் மாமனாக, தான் எந்த விதத்திலும்,எந்த வித
சந்தோஷத்தையும் அந்தக் குழந்தைகள் தம்மிடம் பெறுவதற்கு தான் வாய்ப்பு
ஏற்படுத்தி தரவில்லை என்றக் குற்ற உணர்வால் குறுகிப் போனான் விஜயன்.
முதலில் தன் பெற்றோருக்கு ஒரு நல்ல மகனாக இருந்திருந்தால்தானே
அவர்களை சார்ந்த எல்லா உறவுகளும் திடமாக தொடர்ந்து கொண்டு
இருந்திருக்கும். தெறித்த உண்மை அவனை சுட்டெரித்தது.
" சரி இழந்ததை பற்றி யோசித்து,யோசித்து விசனப் படுவதால் யாருக்கு
என்ன பயன் விளைய போகிறது?.அவையெல்லாம் கடன் என்றுதான்
கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.அதாவது " நன்றிக் கடன் " என்று.
இனி ஒவ்வொருவருக்கும் அந்த நன்றிக் கடனை திருப்பி செலுத்த
என்னென்ன வழி வகைகள் உண்டு என்பதை ஆராய்வதுதான் தனது
தலையாய பணி " தெளிந்த விஜயன் நிமிர்ந்து, தன் நடையை தொடர்ந்தான்.
அதை ஆமோதித்த தென்றலும் விஜயனை ஆசுவாசப்படுத்தியது.
தொடரும் .............
வயற் வரப்புகளில் நடை பயின்றான்.அவனது யோசனையில் எல்லாம் கடும்
சீற்றத்துடன் வந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டுச் சென்ற அந்த புயல்
நினைவாகவே இருந்தது.எத்தனை பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும்
அந்தப் புயலை நேசிக்காமல் இருக்க முடியவில்லை.
விஜயனின் தாய் எல்லாவற்றையும் விவரமாக சொன்னார்.தன் மகள்
வயிற்று பேத்தியின் அருமை,பெருமைகளை விலாவாரியாக சொன்னார்.
அக்காவின் கடைக் குட்டி.படுச்சுட்டி.பெயர் பாரதி என்கிற செல்லம்மாவாம்.
அந்த பெயர் காரணத்தினால்--தானோ என்னவோ,சிறுமைகளை பொறுக்காத
" அக்னி குஞ்சாக "இருக்கிறாள்.அக்காவின் வீட்டை, அக்காவும்,மாமாவும்
நிர்வகிப்பதில்லையாம்.இந்த அக்னி குஞ்சுதான் நிர்வகிக்கிறதாம்.
இந்த அக்னி குஞ்சுவின் ஊரும்,அதன் பாட்டியின் ஊரும் அருகருகில்
இருந்ததனால்,இதற்கு மிகவும் கொண்டாட்டமாக போய்விட்டது.இல்லை
என்றால்,அதன் பாட்டியின் பாடு திண்டாட்டமாக அல்லவா போயிருக்கும் ?
இது அதன் நிதர்சனமான வாதம்.தன் பாட்டி மீது ஏகத்திற்கு வாஞ்சை;
பாசம்;தன் பெற்றோர் மற்றும் தன் குடும்ப அங்கத்தினர்கள் ஒவ்வொருவர்
மீதும் உயிராக இருக்கிறதாம்.அவளுடைய அண்ணிமார்கள் இருவரும்
இவளிடம்தான் எல்லா நல்லது,நல்லது அல்லாத விஷயங்களையும் பகிர்ந்து
கொள்வார்களாம்.இருஊராருக்கும் செல்லப்பிள்ளையாம்.அதனால் இரு
ஊராரும் அவளைசெல்லமாக " செல்லம்மா " என்றே அழைக்கிராற்களாம்,
அம்மா சொல்ல,சொல்ல,விஜயனுக்கு செல்லம்மாவை மிகவும் பிடித்து
போனது.இந்தச் சுட்டிக் குழந்தையை பிறந்ததிலிருந்து,ஒரு தாய் மாமன்
ஸ்தானத்திலிருந்து அதன் குழந்தை பருவத்தை அங்குலம்,அங்குலமாக
ரசித்து, அதனுடன் ஆசை,ஆசையாய் விளையாடி,விரும்பியதல்லாம்
வாங்கித் தந்து,அழுதுக் கொண்டு வந்து நிற்கும் போதெல்லாம்,நான் " தாய்
மாமன் " இருக்கிறேன் என்று அன்பாய் அரவணைத்து, இன்னும் அதன்
ஒவ்வொரு பருவத்திலும்,அதற்கு எழும் எல்லா சந்தேகங்களையும்,வயல்-
-வரப்புகள் நடுவே கைப்பிடித்து அழைத்துக் கொண்டுச் சென்று,அதன்
வயதிற்கு ஏற்றவாறு புரியும்படி,சகல அங்க,அசைவுகளுடன் கதைகல் பல
சொல்லிக் கொண்டு செல்லும் அனுபவம்,அந்த வயல் வரப்பினூடே இந்த
மலர்செண்டு,அசைந்து,அசைந்து நடந்து வரும் அழகு,இன்னும் எத்தனை,
எத்தனையோ சந்தோஷங்களை இழந்த மிகப் பெரிய வருத்தத்தை விஜயன்
உணரலானான்.
இன்னும் சொல்லப் போனால்,தன் உடன் பிறந்த அன்பு சகோதரியின்
குழந்தைகளுக்கு ஒரு தாய் மாமனாக, தான் எந்த விதத்திலும்,எந்த வித
சந்தோஷத்தையும் அந்தக் குழந்தைகள் தம்மிடம் பெறுவதற்கு தான் வாய்ப்பு
ஏற்படுத்தி தரவில்லை என்றக் குற்ற உணர்வால் குறுகிப் போனான் விஜயன்.
முதலில் தன் பெற்றோருக்கு ஒரு நல்ல மகனாக இருந்திருந்தால்தானே
அவர்களை சார்ந்த எல்லா உறவுகளும் திடமாக தொடர்ந்து கொண்டு
இருந்திருக்கும். தெறித்த உண்மை அவனை சுட்டெரித்தது.
" சரி இழந்ததை பற்றி யோசித்து,யோசித்து விசனப் படுவதால் யாருக்கு
என்ன பயன் விளைய போகிறது?.அவையெல்லாம் கடன் என்றுதான்
கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.அதாவது " நன்றிக் கடன் " என்று.
இனி ஒவ்வொருவருக்கும் அந்த நன்றிக் கடனை திருப்பி செலுத்த
என்னென்ன வழி வகைகள் உண்டு என்பதை ஆராய்வதுதான் தனது
தலையாய பணி " தெளிந்த விஜயன் நிமிர்ந்து, தன் நடையை தொடர்ந்தான்.
அதை ஆமோதித்த தென்றலும் விஜயனை ஆசுவாசப்படுத்தியது.
தொடரும் .............
No comments:
Post a Comment