Wednesday, July 16, 2014

1.Varamadhai.............

அன்னை உண்ண அமர்ந்தாள் :

தன்னை மறந்து உண்ண  அமர்ந்தாள் ;

ஆம்!தன்னை மறந்து தான் உண்ணும் உணவின்

தன்மையை மறந்து எதற்கு உண்கிறோம்,

ஏன் உண்கிறோம் என்று தன் நிலை மறந்து

அன்னை உண்ண  அமர்ந்தாள்.


வழக்கம் போல் தடதடவென கதவினை

இடிக்கும் சத்தம்;அச்சத்ததால் அதன்

விளைவுகளின் அச்சத்தால் இன்னும்

ஏதோதோவினால் அயர்ந்தது போய்

சுவர்மேல் சரிந்து போய் இன்னும்

உண்ணவும் முடியுமோ என்று கலங்கினாள் அன்னை.


கதவு திறக்கப்பட்டது;உள்ளே ஒருக் காலும்,

வெளியே ஒருக் காலும் இருக்க ஆடிக்கொண்டு

தள்ளாடிக்கொண்டு நின்றான் தலைமகன்;

குடி, குடியை மட்டுமின்றி சகலத்தையும் கெடுத்ததை

அறிந்தானோ அன்றி அறிந்தும் அறியாதிருந்தானோ

ஆண்டவனே உன்னைப்போல் அவன் மட்டுமே அறிவான்.


அன்னையின் அரவணைப்பை தவிர்த்து,

அவள் அவனை  தன் உறவு சங்கலிகளில்

பிணைக்க முயற்சிக்கும் அவளது பாசம் மறந்து

எப்படியும் சகலத்தையும் தொலைத்து வந்து

நிற்பான்  எனத்  தெரிந்தும், அவன்  தந்தையிடம் வலுவில் நின்று

அவன் விருப்பப்படி பாகம் பிரித்தாள்;பிரிந்தது சகலமும்.


சகலமும் பிரிந்ததுமல்லாமல்,பிரித்ததுமல்லாமல்,

இறுதியில் அன்னையின் ஆயுட்காலமும்  என் கையில்

என அவளது உணவையும் உடலையும் பிரித்து

அவளது உயிர் பறிக்க முனைந்தாயோ மூடனே!

 ஆண்டவன் அருளிய முதல் வரம் நமதருமை அன்னை;

அதை  அந்த  வரமதை தொலைப்பாயோ! 

 






   

  

No comments:

Post a Comment