Friday, July 25, 2014

4.varamadhai..........

ஒன்றை புரிந்துக் கொண்டால் மனிதா!

என்றும் நன்று உனக்கு;என்றென்றும்; உன் 

உடன் பிறந்தோர் உன் உற்ற நண்பர்கள் எனில்,

உன்னுடன் இறுதி வரை உடன் வருபவர் 

அதுவும் நிழலாய்,தன் இன்னுயிர், உடல்,

பொருளனைத்தையும் உனதாக்கி,உன்னை 

உருவாக்கி,அகமுகம் மலர, உன்னுடனேயே 

உலா வரும் உன் மனைவி உன்னுயிர் தோழியன்றோ!


உயிர் தோழமைதன் மதிப்புயர்த்தி தன்னுயிர் 

ஈந்தோர்  வரலாற்றின் பெருமை பல கேள்வியுற்றும்,

உன்னுயிர் தோழி,உனதருமை மனைவிதன் 

மதிப்புயர்த்த ஏதேனும் துரும்பை நகர்த்த உனக்கு  

உத்தேசமுண்டோ?இல்லை உன்குடியது, கூர்வாளதுக் 

கொண்டு " அவளது வாழ்நாள் நாள், நான் அவளை 

வாட்டும் நாள் " என அவளை,உன் உயிர்த் தோழியை 

உன் குடி வதைப்பதை  வேடிக்கைப் பார்ப்பாயோ?


உன் இல்லத்தரசி உன் இல்லத்திற்கு ஒளியூட்டியதற்கு

நீ காட்டும் நன்றி,அவள் கற்றுப் பெற்ற பட்டத்தை 

காற்றில் பறக்க விட்டு  நீ அவளுக்குத் தரும் பட்டம்;

" குடிக்காரன் மனைவி"  என்ற குனிவுத் தரும் பட்டம்;

" உன் குழந்தைகளுக்கு ஒரு நல்லத் தந்தையாக  

தேவைப்படும் முதல் தகுதி, அவர்களது தாயின் 

மதிப்பை உயர்த்துவதுதான் " என்ற மூத்தோர் சொல் 

மறந்து,மனைவி என்ற வரமதை தொலைப்பாயோ!   


 



No comments:

Post a Comment