Wednesday, July 30, 2014

6.varamadhai

நண்பனே!ஆரோக்கியமான நட்புக்கு

வயதும்,ஆண் ,பெண் என்ற வேறுபாடும்

ஒரு பொருட்டே அல்ல;அதில் பரிசுத்தமான

அன்பான அக்கறையே மேலோங்கி நிற்கும்.


அத்தகைய அன்பான நட்பு வட்டத்திலிருந்து

நானும் ஒரு சிநேகிதியாக,என்னிடமிருந்து

ஒரு சிநேகிதமான விண்ணப்பம்;குடிக்கு மகனாக

 மாறிய,மாறுகின்றவரே அதை சிறிது பரிசீலிப்பீரோ!


ஒன்றும் அவசரம் இல்லை;மதுவின் பிடியிலிருந்து,ஒரு

 சிறுகணம் அவகாசம் கிட்டும் உனக்கு;.நம்பிக்கை உண்டு

எனக்கு;அந்த சிறு கணத்தில் எனது அக்கறையின் ஆழம்

புரியும் உனக்கு; ஏனெனில் எனது நம்பிக்கைக்கு ஆழமதிகம்.


புதிதாக செப்ப ஏதுமில்லை;ஒன்றை மட்டும் நினைவூட்ட

 விருப்பம்;மனிதனின் அடையாளம் அவன் ஈட்டும் மரியாதையாம்;

 அவன் வாழ்நாள் முழுதுமது  நிழலாய் தொடர வேண்டுமாம்; அதை,

சங்க  இலக்கியம் மூலம் நம்முள் அழுந்த பதித்தார் நம் ஆசான்.


அதை மட்டும் நினைவூட்ட விருப்பம்;அதை மறப்பாயோ?

அந்த மரியாதையின் மதிப்பை துறப்பாயோ?,அதை மறக்கடித்து,

உன்னையும் மரக்கச் செய்யும் குடி விலக்கி உன் வரமனைத்தும்

தொலைக்காமல் இருப்பாயோ? இருப்பாய் என நம்புகிறேன்.


ஏனெனில்,ஏற்கனவே கூறியிருக்கிறேன் எனது

நம்பிக்கைக்கு ஆழம் அதிகம் என்று. எனவே

முகமன் கூறி  விடை பெறுகிறேன்.மானிடப் பிறப்பின்

வரமதை உனக்கு உணர்த்தும் என் முயற்சி வெற்றிப் பெறும்,







                                    என்ற நம்பிக்கையோடு.



                           

No comments:

Post a Comment