Monday, July 21, 2014

3.Varamadhai...........

பெற்றோரை மதிப்போடு பேணும்போது ,

நம் மதிப்பின் அஸ்திவாரம் பலம் பெறுதல் உறுதி.

அதை நம் உடன்  பிறப்போடு  உடன்பட்டு

கட்டம் கட்டமாக கட்டடமாக உயர்த்தும்போது,

உயர்வது ஊரில் உன் மதிப்பின் பல(ம் )ன் மட்டுமல்ல;

உன் முன்பின் வம்சத்தின் மதிப்பின் பலமும் பலனும்   

உயரக் காண்பாய் உன் தெளிந்த மனதின் விளைவாய்.

ஏனென்றால்,தெளிந்த மனம்  இறைவனின் மனம்.


இந்தத் தெளிந்த மனதை,  இந்த இறை மனதை,

தெளிவின்மைக்கு,ஆம்!தெளிவே  இல்லாமைக்கு     

வித்திடுவது வேறென்ன?மதுதானே!இதிலேது சந்தேகம்?.

மனிதரின் மாண்பை சிதைப்பதுவும், சீர்கெடுப்பதுவும்

மதி கெடுக்கும் மதுவன்றோ!இதை மறந்திடலாமோ?.

மதி பிழையின்றி இருக்கும்போதே மயங்கும்

தருணங்கள் ஏராளம்;இதில் மதிக் கெடுக்கும் மதுவின்

தருணங்களைப்  பற்றி விளக்கமும் வேண்டுமோ?.


பெற்ற பெற்றோரை தூற்ற செய்யும் மதுவது உன் 

உடன் பிறந்தோரை உடனிருக்க விடுமோ?.உடன்

பிறந்தோரின் நேர்மையான கூர்மையான செழுமையான

பலத்தை இந்த சீர்க் கெடுக்கும் மதுவின் பெயரால்

இழப்பதுவும் தர்மமோ?உடன் பிறப்புடன் ஆரோக்கிய

வாழ்நாள் உறவு ஒருப்  பெரிய வரம்.மறப்பாயோ!

 அதை மறந்து புதைச் சேற்றில் விழுவாயோ! விழுந்து,

அந்த அரிய  கிடைத்தற்கரிய வரமதை தொலைப்பாயோ!    



     

No comments:

Post a Comment