Friday, July 18, 2014

2.Varamadhai.........

அன்னையின் தோளோடுத்  தோளாக

அருமைத் தந்தை; அவரே தம் மழலைகளின் ஆசானாக;

அத்தந்தையின்  அருமைப்  புரியும் ;பெருமைத் தெரியும்

 தவமறிந்த,தவத்தின் பலனறிந்த வாரிசுகளுக்கு.


மண்ணோடு மண்ணாய் மட்கிப் போவதற்கு முன்

மைல் கணக்கில்  உள்ளது மாதா பிதாவிற்கான

நம் நன்றியைப்  பேணும் கணக்கு;மனதில்

பதிக்க வேண்டிய நம் கடமையின்  கணக்கு.


இவ்வுலகைக் காண வாய்ப்பளித்ததற்கே

இப்பிறப்பில் நம் நன்றிக் காணுமோ அவர்களுக்கு?,

இதன் பிறகு வளர்த்து ஆளாக்கியதற்கு நன்றிக் கூற 

இன்னும் எத்தனைப் பிறவி வேண்டுமோ!


நானறியேன் பராபரமே!என பரம்பொருளுக்கு

நம் நன்றியை சேர்க்க நமக்குத் தெரிந்தால்,

நம் அன்னையும்,பிதாவும் முன்னறி தெய்வமென ,

நம் நன்றி தெய்வத்திற்கு முன் நம் பெற்றோரிடம் சேர்வது உறுதி.


இதனை மறந்து இன்னார் மகன்  என்றக் 

குலப்பெருமை மறந்து, குடியினால்

குப்புற விழுந்து,கூடி நிற்போரின் ஏச்சும் பேச்சும் பெற்று,

குன்றாய்  பலம் தரும் தந்தை வரமதை தொலைப்பாயோ?. 


 








   

  

No comments:

Post a Comment