Monday, June 23, 2014

14.penmanaikalukku udhava virumbu

    பொதுவாக பெண்மணிகளின் சிரமத்தை ,எல்லா  ஆண்களும்  புரிந்து

 கொள்வதில் ஒரு ஈடுபாடுக் காட்டினால் மிகவும் நலம் என்று தோன்றுகிறது.

ஆனால் பெரும்பாலான ஆண்கள்,பெண்களின் சிரமத்தை ஒருபோதும்

பொருட்படுத்துவதே இல்லை.இன்னும் ஒரு படி மேலே போனால் நம்ப

முடியாதபடி,  பெண்களேத்  தன்னைச் சார்ந்தப் பெண்களின் சிரமத்தைப்

புரிந்தும்,புரியாதது மாதிரி செயல்பட்டுக்   கொண்டிருப்பது ,

குடும்பத்திற்கு நன்மைப் பயக்கும் செயல் அல்ல.பணியிடங்களிலும் பண்பை

மேம்படுத்தும் செயல் அல்ல.இது குடும்பத்திலும்,பணியிடங்களிலும்  நிலவ

வேண்டிய ஆரோக்கியமான உறவை  மேம்படுத்தாது.


     குடும்பங்களிலும் சரி,பணியிடங்களிலும் சரி  பெண்ணிடம்

அனுசரணையுடன் செயல்பட வேண்டும்  என்ற அம்சம்  மிகவும்

முக்கியமானஅம்சமாகும்.இது எப்பொழுதுத்தோன்றும்?.குடும்பத்தில் எல்லா

உறவுகளும் தன்னைச் சார்ந்த பெண்  உறவுகளின்பால் அக்கரைத் தோன்றும்

போதுதான் இது சாத்தியமாகிறது.அதுபோலவே பணியிடங்களிலும்,நம்

நிறுவனத்தின் வளர்ச்சியில் நம்முடன் பணிப் புரியும் பெண்களின்  பங்கும்  

முக்கியமானது என்ற உன்னதமான உணர்வு உயிர் பெறும்போதுதான் இந்த

அனுசரணை என்ற அம்சம் சாத்தியமாகிறது.


   ஒரு பொறுப்புணர்வுள்ள பெண்மை,ஒரு இதமான மேன்மை.அவளின்

மனவலிமைக்கு நிகர் அவள்தான்.அதுதான், அவளை தன் இரத்த

பந்தங்களிலிருந்து பிரித்துக் கொண்டு வந்து எங்கு நட்டாலும்

துளிர்த்தெழுவாள்.அங்கு அவளுக்கு  சாதகமான சூழ்நிலையென்றாலும்

பாதகமான சூழ்நிலையென்றாலும்,தனக்கு அதை சாதகமாக்கி,ஒரு சிறந்த

இல்லத்தரசியாகி, மரமாகி,கிளைப் பரப்பி,காய்கனிகளுடன், கம்பீரமாக

நிற்பாள்.தனக்கு அனுசரணையாக நிற்கும் தன் குடும்பத்தையும் கம்பீரமாக்கி,

அதன் கம்பீரத்தையும்,கௌரவத்தையும் காத்து நிற்பாள்.இத்தகைய சிறப்பு

மிக்க இல்லத்தரசிக்கு,எது இன்றியமையாதது?தன் பொறுப்புகளை சிரமமின்றி

திறம்பட மேற்கொள்ள,அவளுடைய,சிரமங்களை புரிந்துக் கொண்ட

அனுசரணையாக செயல்படும் குடும்பம்தானே தேவை?.


   இத்தனை பெருமையுள்ள பெண்மை,கல்வி பெற்று,அதன் மேன்மை

உணர்ந்து செயல்படும்போது,அதன் சாதனைகளுக்கு எல்லையுண்டோ?

இம்மாதிரியான தருணங்களில் அவளுக்கு அவளது இல்லத்தைப் போலவே,

பணிப்  புரியும் இடங்களிலும்,அவளது சிரமம் புரிந்து ஒத்துழைக்கும்

இயல்பை அவள் எதிர்ப்பார்க்கிறாள். அதுக் கிட்டும்போது அவள்

பணியிடங்களிலும்,தன் பொறுப்பிற்கு தகுந்தபடி தாயாக,உடன்

பிறந்தவளாக,ஒரு நல்லத் தோழியாக தம் சகப் பணியாளர்களின் சிரமம்

குறைப்பாள்.


   சுருங்கச் சொல்வதென்றால்,இல்லங்களில் ,"இது பெண்களுக்கானப்

பணி. "என்று ஒதுக்கி,விலகியிராமலும்,பெண்களின் சுறுசுறுப்பையும்,

அவர்களின் நேர்த்தியான செயல்பாட்டையும் தத்தம் சுயநலத்திற்கு

பயன்படுத்திக் கொள்வதை தவிர்த்து,அவளது உணர்வுகளுக்கு மதிப்பளித்து,

அவளது திறமைகளுக்கு வாய்ப்பளித்து, அவளுக்கு நியாயமான உதவிகள்

தேவைப்படும்போது,குடும்பம்முழுவதும் அனுசரணையாக நிற்கும்போது,

பாதுகாக்கப் படுவது அந்தப் பெண்ணின் உடல்,மன நலம் மட்டுமல்ல.அந்த

குடும்பத்தின் உடல்,மனநலமும் கூட.அது போலவே பெண்ணின் பணியிட

செயல்பாடுகளின் சிறப்புக்கள் அனுசரணையுடன் போற்றப் படும்போது

 பணியிடங்களின் செயல்பாடுகளும் எவ்வித சிக்கல்களுமின்றி

அமைதியுடனும் பாதுகாப்புடனும் செயல்படும்.அதன்  வளர்ச்சிக்கும்

வாய்ப்புக்கள் அதிகம்.


   இன்னும் தெளிவாக செப்ப வேண்டுமென்றால்,அகத்திலும்,புறத்திலும்,

நேர்த்தியாக செயல்படும் பெண்கள் மனமாரப்  போற்றப் பட வேண்டும்.

மனமார அவளுக்கு ஒத்துழைப்புத்  தரும் பண்பு வேண்டும்.அவ்வாறு இல்லை

 எனில், எங்கும்,எதிலும் வளர்ச்சியையும்,செழுமையையும் காண்பது அரிதாகி

விடும்.இது நிதர்சனமான உண்மையாகும்.   
.    


 


   


No comments:

Post a Comment