Monday, July 28, 2014

5.Varamadhai...........

மனிதன்  மனிதனாக உள்ள வரை

இந்தக் கேள்விக்கு இடமே இல்லை;

மனிதன் குடியிடம் தன்னை தத்துக்

கொடுத்தவனாயின்  இந்தக் கேள்விக்கு

பதிலளிக்கக் கடமைப் பட்டவன்;கேள்வி?

குழல்,யாழின் இனிமைக் கூட,மழலை மொழிக்குப்

பின்தான் என்ற வள்ளுவன் மொழி உணர்ந்ததுண்டோ?.

உன் மழலைக்கு,உன் தோழமையை உணர்த்தியதுண்டோ?


மழலை எவ்வயதாயினும்,அன்பையேக் கோரும்;

யாரிடம்?.வேறரிடம்?.பெற்றோரிடம்தானே! அதுவும்

 குறிப்பாக வெளியுலகில் தம்மை பலமாக்கும்

தந்தையிடம்தானே! அந்த எதிர்பார்ப்பில் இருக்கும்

மழலைக்கு திகட்ட திகட்ட உனதன்பை வாரிப்

பொழிந்த திருப்தி என்றேனும் உன்னிடம் ஊறியதுண்டா?

நீ ஊறிக் கிடந்ததெல்லாம் அந்தக்  குடிக்கெடுக்கும் குடியெனில்,

 உன் அன்பின் ஊற்றுக் கண்ணைத் திறப்பது எங்கனம்?


தந்தை மகனு(ளு)க்கு ஆற்றும்  உதவியும்,மகன்(ள் )

தந்தைக்கு அளிக்கும் நன்றியும், வள்ளுவன் வாக்குப்படி,

ஒருவரை ஒருவர் பெருமைப் படுத்தும் தருணங்களன்றோ!

அந்தத் தருணங்களின் மறுப் பரிமாணமன்றோ வாழ்க்கை?

அந்த அன்பு வாழ்க்கையின்,அந்த அற்புதமான தருணங்களின்

மகிமையை  நீயும் உணராமல்,மற்றவரும் உணர விடாமல்,

குடும்பம் என்ற கோயிலில் உன் குலம் கற்பதைத் தடுக்கும்

 உன் குடி நிறுத்தாமல்,மழலை வரமதை தொலைப்பாயோ?.



   

No comments:

Post a Comment