Friday, August 1, 2014

1.Thai mann

     அது ஒரு அயல் நாட்டில் வசிக்கும் ஒரு இந்தியரின் இனிமையான

இல்லம்.அயல்நாட்டுவாசியாகி விளையாட்டுப் போல முப்பது

 வருடங்கள் முயல் குட்டி வேகத்தில் பறந்து விட்டன.இல்லத்

தலைவனான விஜயனுக்கு நம்பவே முடியவில்லை.


   விஜயன் இருதய சம்பந்தமான மருத்துவத்தில் நிபுணன்.அவன் பணிப்

புரியும் அந்த பிரசித்திப் பெற்ற மருத்துவமனையில் அவன் இருதயத்திற்கும்,

 அவனது இருதய மருத்துவ நிபுணவத்திற்கும் ஒரு  இதமான இடமுண்டு.

அவனது சக பணியாளர்களுக்கு அவனை மிகவும் பிடிக்கும்.அவனிடம், தம்

நோய் தீர்க்க வருபவர்களுக்கு,அவனை மிக மிகப் பிடிக்கும்.விஜயன் ஒரு

வித்தியாசமானவன்.சமயங்களில் நோய்க்கு சிகிச்சை அளிக்கும்போதே,

தனக்கு உதவியாக இருக்கும் மருத்துவர்களுக்கு அது சம்பந்தமான பாடம்

எடுப்பான்.


   ஒருவருக்கு பணியிலிருந்து ஓய்வு என்பது காலத்தின்கட்டாயம்.அதற்கு

சில மாதங்களுக்கு முன்பாகவே அவர்களது மனம் அவர்களை அலைகழிக்க

ஆரம்பித்துவிடும்.அடுத்து என்ன செய்வது என்பதே புரியாத புதிராக

இருக்கும்.அதற்கு விஜயனும் விதி விலக்கல்ல.ஏனெனில், அவனும்

ஒய்வுப் பெறும்  தருணத்தில் இருந்தான்.இன்னும் மூன்றே மாதங்கள்தான்

இருக்கின்றன.


ஆனால் அவன் பணிப் புரியும்  மருத்துவமனை விஜயனது

ஆரோக்கியத்தையும், அவனது சேவைக்கு இருக்கும் ஆரோக்கியத்தையும்

அதனால் அந்த மருத்துவமனைக்கு கிடைக்கும் பெயர்

ஆரோக்கியத்தையும்,பண வரவின் ஆரோக்கியத்தையும்

மனதிலும்,கணக்கிலும் கொண்டு விஜயனுக்கு இரண்டு ஆண்டு பணி

நீட்டிப்புக்கு உத்தேசிப்பதாக செவி வழி செய்தி.


   ஆனால் விஜயனுக்கு வேறு விதமான உத்தேசம் இருந்தது. அதை செயல்

படுத்துவதற்கான உத்வேகமும் இருந்தது. 

 
Part 2
                                                                                                                    தொடரும்.......

No comments:

Post a Comment