ஒன்றை நாம் புரிந்துக் கொண்டால் நல்லது நடக்க வாய்ப்புகள்
அதிகம்.அதாவது, உலகத்திற்கான பொதுவான நியாயத்திற்கு உட்பட்டு நாம்
செயல்படுவோமானால்,ஒவ்வொரு விஷயத்திற்கும் நாம் நம் மனதுடன்
கலந்து ஆலோசிப்போம்.நம் மனதின் உன்னத குணமே உள்ளதை
உள்ளபடியே உணர்த்தும் குணம்தான்.
நம் மனம்,ஒரு செயல் நடைமுறைப்படுத்தபடுவதற்கு முன்பே அதன் சாதக,
பாதகங்களை ஆராயும்.நமக்கும்,நம் மனதிற்கும் இடையே நிலவும்
ஆழ்ந்த,ஆரோக்கியமான நட்பைப் பொறுத்து அதன் கணிப்பின் சதவீதம்
உயரும்.அந்த கணிப்பின்படி செயல்பட நமக்கு "உடுக்கை இழந்தவனுக்கு
கைப் போல " என்ற வள்ளுவன் வாக்குப்படி நமக்கு உற்ற நண்பனாய்
உண்மையாய்,உறுதியாய் நம்மோடு இணைந்து செயல்படும் தன்மை மற்றும்
வல்லமைக் கொண்டது.ஏறக்குறைய எல்லாமே அதனதன் பாதைகளில்
சரியாக செயல்படும்.
ஆனால்,உலக நியாங்களின் வழி முறைகளை புறக்கணித்து நம் சொந்த
நியாங்களை முன் நிறுத்தி சுயநலமாக செயல் படுவோமானால்,நமது மனது
தனது முதல் எச்சரிக்கை மணியை ஒலிக்கும்.ஆனால்,நாம் அதை கேட்காதது
போல பாவனையுடன் மேலும்,மேலும் எதிர்மறையாக செயல் படும்போதும்
அது தன் எச்சரிக்கையை அவ்வப்போது தொடர்ந்துக் கொண்டே
இருக்கும்.பிறகுதான் தன் முயற்ச்சியை கைவிட்டு உறங்குவதாக பாவனை
செய்யும்.நம்முடைய ஆர்ப்பாட்டமான வாழ்க்கை முறையில்,நம் மனதின்
எந்த எச்சரிக்கையையும் நாம் கவனத்தில் கொள்ளும் நிலைமையில் நம்
நிலை இருக்காது. விளைவு; நமக்கும்" ஓய்வு " என்ற அந்த காலத்தின்
கட்டாயமான தருணங்கள், நமது சகல ஆர்ப்பாட்டங்களையும் முடக்கும்
தருணங்கள்,நமக்கு இரண வலித் தரும் தருணங்களாக மாற வாய்ப்புகள்
அதிகம்.
இப்போதுதான் நாம் நம் தனிமையை உணர்வோம்.நம் தனிமையை விரட்ட
பிறர் உதவியை நாடி,நாலாபுறமும் பார்வையை படர விடும்போதுதான்
நமக்கேத் தெரியும்.நாம் பொருள் குவிக்க மேற்கொண்ட முயற்சிகளில்,ஒரு
சதவீதமாவது ஒரு இதமான உறவை நம்முடன் நிலை நிறுத்தும்
செயல்பாட்டில் இருக்கவில்லை என்ற உண்மை உறைக்கும்.போதாதக்
குறைக்கு வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சுவது போல,நமது மனதின்
உண்மையான ,உறுதியான,வலிமையான நீதிமன்றத்தில் குற்றவாளிக்
கூண்டில் நாம் நிறுத்தப் படுவோம்.தன் சுய நலத்திற்காக, சொந்த
நியாயங்களை முன் நிறுத்தி செயல்படும் எவருக்கும் இந்த நிரந்தர வலித்
தரும் தருணங்களிளிருந்து தப்பவே முடியாது.
இந்த நிலைமையில்தான் விஜயன் இருந்தான்.இறுதியாக அப்பாவின்
இறுதிச் சடங்கிற்கு வந்தது.இருபது ஆண்டுகள் உருண்டோடி விட்டன.
அப்போது,மகளுக்கு ஏழு வயது.மகனுக்கு ஐந்து வயது.அப்பா வழி தாத்தா,
பாட்டியின் உறவையே, குழந்தைகள் இந்நாள் வரை உணராமல் இருந்த
குற்றத்திற்கு தான்தான் காரணமாகி விட்டோம் என்று உணர்த்திய, உறுத்திய
உண்மையை எதிர் கொள்ள இயலாமல் மருகினான் விஜயன்.ஒரு வழியாய்
விமானப் பயணம் ஒரு முடிவுக்கு வந்தது.அம்மாவிற்கு தான் வரும்
விவரத்தை கடிதம் மூலம் முதலிலேயே தெரியப் படுத்தி இருந்தான்.
ஆனால் விஜயனுக்குத் தெரியாத விவரம் ஒன்று உண்டு. இன்னும் ஒரு
நூறு கிலோமீட்டர் தாண்டி,தன் சொந்த கிராமத்தில் தான் கால் பதிக்கும்
போது,தனக்காக ஒரு மனித வெடி குண்டு ஆக்ரோஷத்துடன் காத்துக்
கொண்டிருப்பது விஜயனுக்கு தெரியாது.
part9 தொடரும்........
அதிகம்.அதாவது, உலகத்திற்கான பொதுவான நியாயத்திற்கு உட்பட்டு நாம்
செயல்படுவோமானால்,ஒவ்வொரு விஷயத்திற்கும் நாம் நம் மனதுடன்
கலந்து ஆலோசிப்போம்.நம் மனதின் உன்னத குணமே உள்ளதை
உள்ளபடியே உணர்த்தும் குணம்தான்.
நம் மனம்,ஒரு செயல் நடைமுறைப்படுத்தபடுவதற்கு முன்பே அதன் சாதக,
பாதகங்களை ஆராயும்.நமக்கும்,நம் மனதிற்கும் இடையே நிலவும்
ஆழ்ந்த,ஆரோக்கியமான நட்பைப் பொறுத்து அதன் கணிப்பின் சதவீதம்
உயரும்.அந்த கணிப்பின்படி செயல்பட நமக்கு "உடுக்கை இழந்தவனுக்கு
கைப் போல " என்ற வள்ளுவன் வாக்குப்படி நமக்கு உற்ற நண்பனாய்
உண்மையாய்,உறுதியாய் நம்மோடு இணைந்து செயல்படும் தன்மை மற்றும்
வல்லமைக் கொண்டது.ஏறக்குறைய எல்லாமே அதனதன் பாதைகளில்
சரியாக செயல்படும்.
ஆனால்,உலக நியாங்களின் வழி முறைகளை புறக்கணித்து நம் சொந்த
நியாங்களை முன் நிறுத்தி சுயநலமாக செயல் படுவோமானால்,நமது மனது
தனது முதல் எச்சரிக்கை மணியை ஒலிக்கும்.ஆனால்,நாம் அதை கேட்காதது
போல பாவனையுடன் மேலும்,மேலும் எதிர்மறையாக செயல் படும்போதும்
அது தன் எச்சரிக்கையை அவ்வப்போது தொடர்ந்துக் கொண்டே
இருக்கும்.பிறகுதான் தன் முயற்ச்சியை கைவிட்டு உறங்குவதாக பாவனை
செய்யும்.நம்முடைய ஆர்ப்பாட்டமான வாழ்க்கை முறையில்,நம் மனதின்
எந்த எச்சரிக்கையையும் நாம் கவனத்தில் கொள்ளும் நிலைமையில் நம்
நிலை இருக்காது. விளைவு; நமக்கும்" ஓய்வு " என்ற அந்த காலத்தின்
கட்டாயமான தருணங்கள், நமது சகல ஆர்ப்பாட்டங்களையும் முடக்கும்
தருணங்கள்,நமக்கு இரண வலித் தரும் தருணங்களாக மாற வாய்ப்புகள்
அதிகம்.
இப்போதுதான் நாம் நம் தனிமையை உணர்வோம்.நம் தனிமையை விரட்ட
பிறர் உதவியை நாடி,நாலாபுறமும் பார்வையை படர விடும்போதுதான்
நமக்கேத் தெரியும்.நாம் பொருள் குவிக்க மேற்கொண்ட முயற்சிகளில்,ஒரு
சதவீதமாவது ஒரு இதமான உறவை நம்முடன் நிலை நிறுத்தும்
செயல்பாட்டில் இருக்கவில்லை என்ற உண்மை உறைக்கும்.போதாதக்
குறைக்கு வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சுவது போல,நமது மனதின்
உண்மையான ,உறுதியான,வலிமையான நீதிமன்றத்தில் குற்றவாளிக்
கூண்டில் நாம் நிறுத்தப் படுவோம்.தன் சுய நலத்திற்காக, சொந்த
நியாயங்களை முன் நிறுத்தி செயல்படும் எவருக்கும் இந்த நிரந்தர வலித்
தரும் தருணங்களிளிருந்து தப்பவே முடியாது.
இந்த நிலைமையில்தான் விஜயன் இருந்தான்.இறுதியாக அப்பாவின்
இறுதிச் சடங்கிற்கு வந்தது.இருபது ஆண்டுகள் உருண்டோடி விட்டன.
அப்போது,மகளுக்கு ஏழு வயது.மகனுக்கு ஐந்து வயது.அப்பா வழி தாத்தா,
பாட்டியின் உறவையே, குழந்தைகள் இந்நாள் வரை உணராமல் இருந்த
குற்றத்திற்கு தான்தான் காரணமாகி விட்டோம் என்று உணர்த்திய, உறுத்திய
உண்மையை எதிர் கொள்ள இயலாமல் மருகினான் விஜயன்.ஒரு வழியாய்
விமானப் பயணம் ஒரு முடிவுக்கு வந்தது.அம்மாவிற்கு தான் வரும்
விவரத்தை கடிதம் மூலம் முதலிலேயே தெரியப் படுத்தி இருந்தான்.
ஆனால் விஜயனுக்குத் தெரியாத விவரம் ஒன்று உண்டு. இன்னும் ஒரு
நூறு கிலோமீட்டர் தாண்டி,தன் சொந்த கிராமத்தில் தான் கால் பதிக்கும்
போது,தனக்காக ஒரு மனித வெடி குண்டு ஆக்ரோஷத்துடன் காத்துக்
கொண்டிருப்பது விஜயனுக்கு தெரியாது.
part9 தொடரும்........
No comments:
Post a Comment