Saturday, August 16, 2014

7.Thai Mann.

    விஜயன் விமானத்தில் பறந்துக் கொண்டிருந்த போது பலதரப்பட்ட

நினைவுகள் அவன் மனதில் அலைமோதிக் கொண்டிருந்தன.தன் தாயைப்

பற்றி எண்ணும்போது மனம் ஒரு நிலையில் இல்லை. தன்னைப் பெற்று,

வளர்த்து ஆளாக்கிய தன் அன்னைக்கு ஒரு சாதாரண  மகனாகக் கூட தான்

தன் அடிப்படைக் கடமைகளை செய்யவில்லை.சாதரணமாக சொல்லி

விடலாம் நம் பெற்றோர் நம்மைப் பெற்று வளர்த்து ஆளாக்கினர்  என்று.

ஆனால் ஒவ்வொரு பருவத்திலும் அந்தந்த பருவத்திற்கான கஷ்டங்கள்

 மாளாது.உயிர் போய் போய் வந்துக் கொண்டிருக்கும்.


     கரு உருவாகி அது வளரும் அந்த பத்து மாதங்களும் அந்தத் தாய் தன்

வாய் ருசி மறக்க மற்றும் மரக்கச் செய்யும் அந்த ஆரம்ப,மத்திய,இறுதி கால

சிசு வளரும் காலங்கள், அந்தந்த காலங்களின் சிரமங்கள்,பல வகையான

உடல்வாகும்,மனவாகும் கொண்ட  தாய்மார்களை , பல வகையான

இன்னல்களுக்கு உட்படுத்தும் சித்திரவதைகள்.பெறப் போகும் தாயின்

 நிலைமை இப்படி என்றால்,தந்தையின் நிலைமை வேறு விதமான

சித்திரைவதைகள்.


  முதல் சித்திரவதை தமது நினைவுக்கு வந்து வந்து அச்சுறுத்தும் தமது நிதி

நிலைமை.சுக பிரசவமாக வேண்டுமே என்றக் கவலை. பிரசவத்திற்கு பின்,

தாய் தெம்புடன் நடமாடும் வரை,மனைவி மேற்பார்வையிட்ட

அனைத்தையும்,தான் மேற்பார்வையிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்

நிலைமை.குழந்தை பிறந்ததும்,அதை கௌரவமாக வளர்த்து ஆளாக்க

வேண்டுமே என்ற கவலை.


    தனது நிலைமையைத் தாண்டி தனதுக் குழந்தைக்கு செய்யத் துடிக்கும்

மனது.ஆரம்பக் கல்வி முடியும் முன் தன் குழந்தைக்கு நல்லதை, நல்லது

அல்லாததை தெளிவாக்கும் முயற்சியில் தானும் தன் மனைவியும் அதன்

பருவத்திற்கு இறங்கி செயல் படும்போது அதற்கு புரிய வேண்டுமே

என்றக் கவலை.பத்து வயது வரைதான் குழந்தை.


   அடுத்த பகுதியில் இருந்து பள்ளி இறுதி வரை பல வகையான கவலைகள்

பெற்றோர்களுக்கு.ஆசிரியரிடமிருந்து எந்த விதமான புகார்களும் வராமல்

பார்க்க வேண்டும்.நல்ல நண்பர்களின் சேர்க்கை வேண்டும்.இனக்

கவர்ச்சியால் பாதிக்கப்படாமல் ஆண்,பெண்ணின் ஆரோக்கிய நட்பை

ஆரோக்கியமாக புரிந்துக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.

படிப்பின் முக்கியத்துவத்தை புரிய வைக்க வேண்டும். அதன் மூலம் தன்

கடமைகளை நிறைவேற்ற தேவையான வாழ்க்கை மேம்பாடுகள் பற்றிய

ஒருத் தெளிவை தன் குழந்தை மனதில் ஆழப் பதிய வைக்க வேண்டும்.

தனது இந்த செயற்பாட்டை தன் குழந்தை சரியாக உள்வாங்கிக் கொள்ள

வேண்டுமே என்ற பெருங்கவலை.


    இதையெல்லாம் சாத்தியமாக்கும் முயற்சியில் தன் நிலைமையைத் தாண்டி

செயல் படும் வேகம்.இந்த வேகத்தில்,தங்களது நலனையும்,சுக

துக்கங்களையும் மறந்து குழந்தையை ஆளாக்கி விட்டு,இப்போது நமக்கு

எல்லா விதத்திலும் பக்க பலமாக இருப்பான் என்று அவன் (ள் ) முகம்

பார்த்தால்,ஏதேதோ  காரணங்களைக் காட்டி,முதலில் ஒரு தற்காலிகப்

பிரிவை ஏற்படுத்தி,பிறகு ஒரு நிரந்தரப் பிரிவை ஏற்படுத்திக் கொள்ளும்

விஜயனைப் போல வாரிசுகளுக்கு எதுக் கிட்டும்.மனச் சிதைவு நோய்தான்

பரிசாகக் கிட்டும்.


   அதுவரை, தான் உறங்குவதாக பாவனை செய்துக் கொண்டிருக்கும் மனது,

தனது உடல் தளர்ந்த பிறகு,அதன் விளைவான அதன் இரைச்சல்களும் ஓய்ந்த

பிறகு, எழுந்து நிற்கும் பாருங்கள்.அது தன் சாட்சிகளுடன் நீதிக் கேட்க நிற்கும்

தோரணம் நம்மை அச்சத்தில் உறைய வைக்கும். பிறகு அது தன்

வலிமையான வாதங்களை தனது வலிமையான சாட்சிகளுடன் நிசப்தமான

பின்னணியில் உரக்க உரைக்கும்போது நமது சப்த நாடியும் ஒடுங்கி

விடும்.அந்த உண்மைகள் உரைக் கல்லில் பட்டுத் பட்டுத் தெறிக்கும் ஒலி,

நம் வாழ்நாள் முழுதும் நம்மை சித்திரைவதைகுட்படுத்தும்.




     அதைத்தான் விஜயன் தனது விமானப் பயணம் முழுவதும்

அனுபவித்துக் கொண்டிருந்தான்.



                                                                                       
  part8                                                                                                  தொடரும்........

  

             



No comments:

Post a Comment