ஓடி விளையாடு பாப்பா,
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா.
கூடி விளையாடு பாப்பா;
ஒரு குழந்தையை வையாதே பாப்பா.
இது பாரதியின் விளையாட்டோடு பிரியமாய் விளையாடும் வரிகள்.ஆனால்
இந்நாளில் இதன் முக்கியத்துவம் புரியாமல் அல்லது புரிந்தும் புரியாதவராய்
அல்லது புரிந்தும் அதற்கு முக்கியத்துவம் தராமல் இருக்கும் மனிதர்களை
காணும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
விளையாட்டைப் புறக்கணிப்பவர்களை,மனிதத் தன்மையை இழந்தவர்கள்
என்றேக் கொள்ளலாம்.ஏனென்றால் எல்லா விளையாட்டுகளுமே எல்லா
மனிதத் தன்மைகளையும் குறிப்பிட்டு செப்புபவைகளாகவே இருக்கின்றன.
உதாரணமாக,
கால்பந்து,கைபந்து மற்றும் அதிகம் பேர் பங்கெடுத்து விளையாடப்படும்
விளையாட்டுகள் -ஒற்றுமை மற்றும் ஒருவரை ஒருவர் அனுசரித்து போகும்
பண்பாடு,ஒருவருக்கொருவர் நாம் இருக்கிறோம் என்ற நம்பிக்கை,
ஒற்றுமையின் பலம் இவற்றை நாம் உணர வழி வகுக்கிறது.
திறந்த வெளி விளையாட்டுக்களும் மற்றும் உள் கட்டமைப்பில்
விளையாடப்படும் விளையாட்டுக்களும் நம் உடல் ஆரோக்கியத்தையும்,
மன ஆரோக்கியத்தையும் பேணிக் காக்கின்றன.இவ்விரண்டும் பலதரப்பட்ட
விளையாட்டுக்களை தினமும் விளையாடுவதன் மூலம் மேம்பட்டுக்
கொண்டேஇருக்கும்.மனமும்,உடலும் ஒன்றையொன்று சார்ந்துதானே
செயல்படுகின்றன.அந்த செயல்பாட்டில் ஒரே மாதிரியான சமநிலையுடன்
சீராக செயல்பட விளையாட்டுக்கள் பேருதவியாக இருக்கின்றன.
இப்பொழுதைய காலக்கட்டத்தில் அடுக்கு மாடி குடியிருப்புக்கள் ஒரு வரப்
பிரசாதமாக இருக்கின்றன.ஏனென்றால், பணிநிமித்தம் தத்தம் பூர்வீக
மண்ணிலிருந்து இடம் பெயரும் சூழ்நிலையில்,நம் பூர்வீக மண்ணிலேயே
நாம் வசிக்கும் உணர்வை தருபவை இந்த அடுக்கு மாடி குடியிருப்புக்கள்.
ஆனால் இந்த உணர்வின் மகிமையை பெரும்பாலான குடியிருப்புகள்
புரிந்துக் கொள்ளாதது பெரிய வருத்தமான விஷயமாகும்.அவரவர்
பகுதியில் நாள் முழுதும் அடைப்பட்டுக் கொண்டே இருந்துக் கொண்டு,
ஒரே கூரையின்கீழ் வாழும் அக்கம்பக்கத்தினரிடம் கூட ஒரு தோழமை
நிலையை வளர்த்துக்கொள்ள தயாராக இல்லாமல் இருப்பது ஒரு
நாகரீகமான செயல் அல்ல என்றே கூற வேண்டும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் குழந்தைகளுக்கு ஒருவருடன் பழகி,
விளையாடி தம் எண்ணங்களை பகிர்ந்துக்கொள்ள எங்கனம் வாய்ப்புக்
கிட்டும்?.கல்வி ஒன்றையேக் குறிக்கோளாக கொண்டு விளையாட்டை
தம் குழந்தைகள் புறக்கணிக்க வழி வகுக்கும் பெற்றோர்களின் அறியாமை
.குழந்தைகளின் மனநிலையை அதிகமாகவே பாதிக்கின்றன.
விளையாட்டுக்கள் நம்மை நாம் உணர வாய்ப்புக்களை ஏற்படுத்தி
தருகின்றன.அகமும்,புறமும் தத்தம் பலம் மற்றும் பலவீனங்களை உணர
வழி வகுக்கின்றன.தத்தம் வயதிற்கேற்ற பக்குவம் பெற வாய்ப்புக்கள்
உருவாகின்றன.அடிப்படை பண்பாடுகளை மெருகேற்றுகின்றன.பண்பாடுகள்
மெருகேற மெருகேற ஒருவரை ஒருவர் அனுசரித்து போகும் நாகரீகமும்
மெருகேறும்.மூளையின் செயல்பாடுகள் கூர்மைப் பெரும்.நமது மனம்
ஒருமுகப் படுத்தப்படும்.ஒன்றை ஒன்று சார்ந்து செயல் படும் அமைப்பில்
இருக்கும் நமது மனமும்,உடலும் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும்
சீராகவும் செயல்படுவதற்கான மேம்பட்ட வாய்ப்புக்களை, பலவகையான
விளையாட்டுக்கள் பல வகையான வாய்ப்புக்களை உருவாக்கித் தருவதால்
முரண்பாடுகளற்ற மகிழ்ச்சியான,எவ்விதமான நோய்களையும்,
அண்டவிடாத சூழ்நிலை உருவாகும் வாய்ப்புக்கள் அதிகம்.அது நமது
இல்லங்களிலும் பிரதிபலிக்கும்.
அதனால் விளையாட்டின் பெருமையை உணர்த்தும், காலத்திற்கும் நிலைப்
பெற்றிருக்கும் நமது கவி பாரதியின் கவிதைகளை மனதிலேற்றி,
விளையாட்டில் நமது பங்களிப்பை மேம்படுத்துவது அறிவு பூர்வமான
செயல் என்பது திண்ணம்.
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா.
கூடி விளையாடு பாப்பா;
ஒரு குழந்தையை வையாதே பாப்பா.
இது பாரதியின் விளையாட்டோடு பிரியமாய் விளையாடும் வரிகள்.ஆனால்
இந்நாளில் இதன் முக்கியத்துவம் புரியாமல் அல்லது புரிந்தும் புரியாதவராய்
அல்லது புரிந்தும் அதற்கு முக்கியத்துவம் தராமல் இருக்கும் மனிதர்களை
காணும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது.
விளையாட்டைப் புறக்கணிப்பவர்களை,மனிதத் தன்மையை இழந்தவர்கள்
என்றேக் கொள்ளலாம்.ஏனென்றால் எல்லா விளையாட்டுகளுமே எல்லா
மனிதத் தன்மைகளையும் குறிப்பிட்டு செப்புபவைகளாகவே இருக்கின்றன.
உதாரணமாக,
கால்பந்து,கைபந்து மற்றும் அதிகம் பேர் பங்கெடுத்து விளையாடப்படும்
விளையாட்டுகள் -ஒற்றுமை மற்றும் ஒருவரை ஒருவர் அனுசரித்து போகும்
பண்பாடு,ஒருவருக்கொருவர் நாம் இருக்கிறோம் என்ற நம்பிக்கை,
ஒற்றுமையின் பலம் இவற்றை நாம் உணர வழி வகுக்கிறது.
திறந்த வெளி விளையாட்டுக்களும் மற்றும் உள் கட்டமைப்பில்
விளையாடப்படும் விளையாட்டுக்களும் நம் உடல் ஆரோக்கியத்தையும்,
மன ஆரோக்கியத்தையும் பேணிக் காக்கின்றன.இவ்விரண்டும் பலதரப்பட்ட
விளையாட்டுக்களை தினமும் விளையாடுவதன் மூலம் மேம்பட்டுக்
கொண்டேஇருக்கும்.மனமும்,உடலும் ஒன்றையொன்று சார்ந்துதானே
செயல்படுகின்றன.அந்த செயல்பாட்டில் ஒரே மாதிரியான சமநிலையுடன்
சீராக செயல்பட விளையாட்டுக்கள் பேருதவியாக இருக்கின்றன.
இப்பொழுதைய காலக்கட்டத்தில் அடுக்கு மாடி குடியிருப்புக்கள் ஒரு வரப்
பிரசாதமாக இருக்கின்றன.ஏனென்றால், பணிநிமித்தம் தத்தம் பூர்வீக
மண்ணிலிருந்து இடம் பெயரும் சூழ்நிலையில்,நம் பூர்வீக மண்ணிலேயே
நாம் வசிக்கும் உணர்வை தருபவை இந்த அடுக்கு மாடி குடியிருப்புக்கள்.
ஆனால் இந்த உணர்வின் மகிமையை பெரும்பாலான குடியிருப்புகள்
புரிந்துக் கொள்ளாதது பெரிய வருத்தமான விஷயமாகும்.அவரவர்
பகுதியில் நாள் முழுதும் அடைப்பட்டுக் கொண்டே இருந்துக் கொண்டு,
ஒரே கூரையின்கீழ் வாழும் அக்கம்பக்கத்தினரிடம் கூட ஒரு தோழமை
நிலையை வளர்த்துக்கொள்ள தயாராக இல்லாமல் இருப்பது ஒரு
நாகரீகமான செயல் அல்ல என்றே கூற வேண்டும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் குழந்தைகளுக்கு ஒருவருடன் பழகி,
விளையாடி தம் எண்ணங்களை பகிர்ந்துக்கொள்ள எங்கனம் வாய்ப்புக்
கிட்டும்?.கல்வி ஒன்றையேக் குறிக்கோளாக கொண்டு விளையாட்டை
தம் குழந்தைகள் புறக்கணிக்க வழி வகுக்கும் பெற்றோர்களின் அறியாமை
.குழந்தைகளின் மனநிலையை அதிகமாகவே பாதிக்கின்றன.
விளையாட்டுக்கள் நம்மை நாம் உணர வாய்ப்புக்களை ஏற்படுத்தி
தருகின்றன.அகமும்,புறமும் தத்தம் பலம் மற்றும் பலவீனங்களை உணர
வழி வகுக்கின்றன.தத்தம் வயதிற்கேற்ற பக்குவம் பெற வாய்ப்புக்கள்
உருவாகின்றன.அடிப்படை பண்பாடுகளை மெருகேற்றுகின்றன.பண்பாடுகள்
மெருகேற மெருகேற ஒருவரை ஒருவர் அனுசரித்து போகும் நாகரீகமும்
மெருகேறும்.மூளையின் செயல்பாடுகள் கூர்மைப் பெரும்.நமது மனம்
ஒருமுகப் படுத்தப்படும்.ஒன்றை ஒன்று சார்ந்து செயல் படும் அமைப்பில்
இருக்கும் நமது மனமும்,உடலும் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும்
சீராகவும் செயல்படுவதற்கான மேம்பட்ட வாய்ப்புக்களை, பலவகையான
விளையாட்டுக்கள் பல வகையான வாய்ப்புக்களை உருவாக்கித் தருவதால்
முரண்பாடுகளற்ற மகிழ்ச்சியான,எவ்விதமான நோய்களையும்,
அண்டவிடாத சூழ்நிலை உருவாகும் வாய்ப்புக்கள் அதிகம்.அது நமது
இல்லங்களிலும் பிரதிபலிக்கும்.
அதனால் விளையாட்டின் பெருமையை உணர்த்தும், காலத்திற்கும் நிலைப்
பெற்றிருக்கும் நமது கவி பாரதியின் கவிதைகளை மனதிலேற்றி,
விளையாட்டில் நமது பங்களிப்பை மேம்படுத்துவது அறிவு பூர்வமான
செயல் என்பது திண்ணம்.
No comments:
Post a Comment