ஒரு கற்காலம் தற்கால நாகரீக வளர்ச்சியின் பற்பல பரிமாணங்களில்
மிளிர்ந்துக் கொண்டு பீடு நடையுடன் மேலும், மேலும் தன் பயணத்தில்
முத்திரை பதித்த வண்ணம் முன்னேறிக் கொண்டிருக்கிறதென்றால்,அதன்
பயணத்தில் நேரிடும்,இயற்கையான இடர்பாடுகளையும், செயற்கையான
தவறுகளையும் சரியாக்கி, சரியாக்க வாய்ப்புக்கள்ஏற்படுத்தி ,அதை
நேர்படுத்திக் கொண்டவருவதனால்தான்,எல்லாத் துறைகளிலும் வியத்தகு
வளர்ச்சி ஒரு நடைமுறை போல் தன் முத்திரையைப் பதித்துக் கொண்டே
வருகிறது. இதன் விளைவுகள்தான் பண்பாடுகளாகவும் பிரதிபலிக்கின்றன.
இந்த விதி,தனிமனித வாழ்வியலுக்கும் சால பொருந்தும்.அதாவது,நம்
வாழ்வில் நேரிடும் அதே இயற்கையான இடர்பாடுகளையும்,செயற்கையான
தவறுகளையும்நாம்சரியாக்க,நேர்ப்படுத்தவாய்ப்பளிக்கத் தவறினோமானால்
நம் வாழ்விலும்,நம் உறவுகளிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படாது.
முன்னேற்றமே ஏற்படாதபோது முத்திரைப் பதிக்கும் தருணத்திற்கு
வாய்ப்பேது?.
தவறுகள் ஏற்பட ஏற்படும்போது ,அதனை சரிபடுத்தும் நம் முயற்சிகள்
வலுக்க வலுக்கதான் இல்லங்களிலும், உறவுகளிலும் நாகரீகமும்,பண்பாடும்
தலைத்தூக்க ஆரம்பிக்கும்.இயற்கையான தவறுகள்,தம் தவறுகள்
உணர்ந்ததும்,உணர்த்தப்பட்டதும் தெளிவுப்படும்.செயற்கையான தவறுகள்
தாமாகவும் தெளிவுப்படாது;தெளிவுப்படுத்த வாய்ப்புகளும்
அளிக்காது.இல்லங்களிலும்.உறவுகளிலும் ஒரு ஆனந்தமான அமைதி
நிலைப் பெற வேண்டுமெனில்,நம் செயல்பாடுகளில் உறுதியான ஒருதெளிவு
வேண்டும்.நம் உறவுகளும் இந்தத் தெளிவுப் பெற நாம்
உறுதுனையாகநிற்க வேண்டும்.
நம் செயல்கள் சரியானவையா?இல்லையா?;நமக்கு இது தேவையா?
இல்லையா? என சீர்த்தூக்கிப் பார்க்கும் தெளிவு நமக்கும் நம் உறவுகளுக்கும்
நிலை மாறாமல் இருக்கிறதா? என்று சரிபார்த்து, சரியாக்கிக்
கொண்டு இருந்தாலே,நம் உறவுகளின் செயல்பாட்டில்
நாகரீகத்தையும்,பண்பாட்டையும் நிலை நிறுத்தலாம்.
நம்மை விட்டு செல்வங்களாகக் கருதப்படும் எது நீங்கினும், நமக்கென்று
நான்கு மனித உறவுகள் எல்லா வகையான செல்வங்களாக நம்முன்
நம்பிக்கையின் சின்னமாக நிற்க வழிவகுக்க வேண்டுமெனில் நாமும்
நம்பிக்கைக்கு உரியவர்களாக மாற வேண்டும்.அதற்கு சிறந்த வழி
நாமும், நமது உறவுகளும் ஒருவருக்கொருவர் தத்தம் தவறுகளை சுட்டிக்
காட்டி தமக்குள் அதை சரி செய்துக் கொள்ளும் மானசீகமான மதி
மந்திரிகளாய் ஒருவருக்கொருவர் இருக்க முயற்சிப்பது,அகத்திலும்,
புறத்திலும் மாண்புகள் நிறைந்த உறவுகளுக்கு வழி வகுக்கும்.
மிளிர்ந்துக் கொண்டு பீடு நடையுடன் மேலும், மேலும் தன் பயணத்தில்
முத்திரை பதித்த வண்ணம் முன்னேறிக் கொண்டிருக்கிறதென்றால்,அதன்
பயணத்தில் நேரிடும்,இயற்கையான இடர்பாடுகளையும், செயற்கையான
தவறுகளையும் சரியாக்கி, சரியாக்க வாய்ப்புக்கள்ஏற்படுத்தி ,அதை
நேர்படுத்திக் கொண்டவருவதனால்தான்,எல்லாத் துறைகளிலும் வியத்தகு
வளர்ச்சி ஒரு நடைமுறை போல் தன் முத்திரையைப் பதித்துக் கொண்டே
வருகிறது. இதன் விளைவுகள்தான் பண்பாடுகளாகவும் பிரதிபலிக்கின்றன.
இந்த விதி,தனிமனித வாழ்வியலுக்கும் சால பொருந்தும்.அதாவது,நம்
வாழ்வில் நேரிடும் அதே இயற்கையான இடர்பாடுகளையும்,செயற்கையான
தவறுகளையும்நாம்சரியாக்க,நேர்ப்படுத்தவாய்ப்பளிக்கத் தவறினோமானால்
நம் வாழ்விலும்,நம் உறவுகளிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படாது.
முன்னேற்றமே ஏற்படாதபோது முத்திரைப் பதிக்கும் தருணத்திற்கு
வாய்ப்பேது?.
தவறுகள் ஏற்பட ஏற்படும்போது ,அதனை சரிபடுத்தும் நம் முயற்சிகள்
வலுக்க வலுக்கதான் இல்லங்களிலும், உறவுகளிலும் நாகரீகமும்,பண்பாடும்
தலைத்தூக்க ஆரம்பிக்கும்.இயற்கையான தவறுகள்,தம் தவறுகள்
உணர்ந்ததும்,உணர்த்தப்பட்டதும் தெளிவுப்படும்.செயற்கையான தவறுகள்
தாமாகவும் தெளிவுப்படாது;தெளிவுப்படுத்த வாய்ப்புகளும்
அளிக்காது.இல்லங்களிலும்.உறவுகளிலும் ஒரு ஆனந்தமான அமைதி
நிலைப் பெற வேண்டுமெனில்,நம் செயல்பாடுகளில் உறுதியான ஒருதெளிவு
வேண்டும்.நம் உறவுகளும் இந்தத் தெளிவுப் பெற நாம்
உறுதுனையாகநிற்க வேண்டும்.
நம் செயல்கள் சரியானவையா?இல்லையா?;நமக்கு இது தேவையா?
இல்லையா? என சீர்த்தூக்கிப் பார்க்கும் தெளிவு நமக்கும் நம் உறவுகளுக்கும்
நிலை மாறாமல் இருக்கிறதா? என்று சரிபார்த்து, சரியாக்கிக்
கொண்டு இருந்தாலே,நம் உறவுகளின் செயல்பாட்டில்
நாகரீகத்தையும்,பண்பாட்டையும் நிலை நிறுத்தலாம்.
நம்மை விட்டு செல்வங்களாகக் கருதப்படும் எது நீங்கினும், நமக்கென்று
நான்கு மனித உறவுகள் எல்லா வகையான செல்வங்களாக நம்முன்
நம்பிக்கையின் சின்னமாக நிற்க வழிவகுக்க வேண்டுமெனில் நாமும்
நம்பிக்கைக்கு உரியவர்களாக மாற வேண்டும்.அதற்கு சிறந்த வழி
நாமும், நமது உறவுகளும் ஒருவருக்கொருவர் தத்தம் தவறுகளை சுட்டிக்
காட்டி தமக்குள் அதை சரி செய்துக் கொள்ளும் மானசீகமான மதி
மந்திரிகளாய் ஒருவருக்கொருவர் இருக்க முயற்சிப்பது,அகத்திலும்,
புறத்திலும் மாண்புகள் நிறைந்த உறவுகளுக்கு வழி வகுக்கும்.
No comments:
Post a Comment