Sunday, June 1, 2014

10.Rasiththu,Rusiththu unna virumbu

எண்சாண்  உடம்புக்கு வயிறே பிரதானம்

தானத்தில் சிறந்தது அன்னதானம்.

மனம் நிறைந்த விருந்தோம்பலால் நிலைக்கும் உறவு,

 அதை நம் உடலுக்கு மறந்ததால்  ( மறுத்ததால் )  நம் ஆரோக்கியத்தில் சரிவு.


எதை உண்கிறோம்? ஏன் உண்கிறோம்?இந்த அசிரத்தை;

விளைவு;வஞ்சகமின்றி  நிற்கும் நோய்களின் வரிசை.

பாரம்பரிய உணவின் மகத்துவம் புரிந்துக் கொள்ள,

நம் உணவில் கவனம் செலுத்த வேண்டும்  மெல்ல.


விருந்தோம்பல் செப்பும் விருந்தின்  சிறப்பு ,

மனம் குளிர்ந்ததால் தூர நிற்கும் உறவில் கசப்பு .

நம் உடலுக்கு நம் விருந்தோம்பல்,அதன் மனதில் பதிய,

ஆர்வமாக உண்போம்,உண்ட அனைத்தும்  சரியாக செரிய.


துரித உணவு வகைகளைப் பின்தள்ளுதல் உத்தமம்;

துரிதமாக உண்பதையும் கண்காணித்தல் உத்தமம்;

ரசித்து, ருசித்து உண்ண பழகுவது மேலும் உத்தமம்;

அறுசுவை உணவை அன்புடன் பரிமாறும் அன்னை உத்தமத்திலும் உத்தமம். 


தூய நீரும்,பசுங்காய்கறிகளோடு தூய நல் பாலும்,

அவரவர் உடல்நலத்திர்கேற்ப அளவான புலாலும்,

உடற்பயிற்சியுடன் காலத்தோடு உண்ணப் பயின்றால்,

உடலும்,மனமும் ஒன்றாக,நன்றாக செயல்படுமன்றோ?


 



   

No comments:

Post a Comment