எண்சாண் உடம்புக்கு வயிறே பிரதானம்
தானத்தில் சிறந்தது அன்னதானம்.
மனம் நிறைந்த விருந்தோம்பலால் நிலைக்கும் உறவு,
அதை நம் உடலுக்கு மறந்ததால் ( மறுத்ததால் ) நம் ஆரோக்கியத்தில் சரிவு.
எதை உண்கிறோம்? ஏன் உண்கிறோம்?இந்த அசிரத்தை;
விளைவு;வஞ்சகமின்றி நிற்கும் நோய்களின் வரிசை.
பாரம்பரிய உணவின் மகத்துவம் புரிந்துக் கொள்ள,
நம் உணவில் கவனம் செலுத்த வேண்டும் மெல்ல.
விருந்தோம்பல் செப்பும் விருந்தின் சிறப்பு ,
மனம் குளிர்ந்ததால் தூர நிற்கும் உறவில் கசப்பு .
நம் உடலுக்கு நம் விருந்தோம்பல்,அதன் மனதில் பதிய,
ஆர்வமாக உண்போம்,உண்ட அனைத்தும் சரியாக செரிய.
துரித உணவு வகைகளைப் பின்தள்ளுதல் உத்தமம்;
துரிதமாக உண்பதையும் கண்காணித்தல் உத்தமம்;
ரசித்து, ருசித்து உண்ண பழகுவது மேலும் உத்தமம்;
அறுசுவை உணவை அன்புடன் பரிமாறும் அன்னை உத்தமத்திலும் உத்தமம்.
தூய நீரும்,பசுங்காய்கறிகளோடு தூய நல் பாலும்,
அவரவர் உடல்நலத்திர்கேற்ப அளவான புலாலும்,
உடற்பயிற்சியுடன் காலத்தோடு உண்ணப் பயின்றால்,
உடலும்,மனமும் ஒன்றாக,நன்றாக செயல்படுமன்றோ?
தானத்தில் சிறந்தது அன்னதானம்.
மனம் நிறைந்த விருந்தோம்பலால் நிலைக்கும் உறவு,
அதை நம் உடலுக்கு மறந்ததால் ( மறுத்ததால் ) நம் ஆரோக்கியத்தில் சரிவு.
எதை உண்கிறோம்? ஏன் உண்கிறோம்?இந்த அசிரத்தை;
விளைவு;வஞ்சகமின்றி நிற்கும் நோய்களின் வரிசை.
பாரம்பரிய உணவின் மகத்துவம் புரிந்துக் கொள்ள,
நம் உணவில் கவனம் செலுத்த வேண்டும் மெல்ல.
விருந்தோம்பல் செப்பும் விருந்தின் சிறப்பு ,
மனம் குளிர்ந்ததால் தூர நிற்கும் உறவில் கசப்பு .
நம் உடலுக்கு நம் விருந்தோம்பல்,அதன் மனதில் பதிய,
ஆர்வமாக உண்போம்,உண்ட அனைத்தும் சரியாக செரிய.
துரித உணவு வகைகளைப் பின்தள்ளுதல் உத்தமம்;
துரிதமாக உண்பதையும் கண்காணித்தல் உத்தமம்;
ரசித்து, ருசித்து உண்ண பழகுவது மேலும் உத்தமம்;
அறுசுவை உணவை அன்புடன் பரிமாறும் அன்னை உத்தமத்திலும் உத்தமம்.
தூய நீரும்,பசுங்காய்கறிகளோடு தூய நல் பாலும்,
அவரவர் உடல்நலத்திர்கேற்ப அளவான புலாலும்,
உடற்பயிற்சியுடன் காலத்தோடு உண்ணப் பயின்றால்,
உடலும்,மனமும் ஒன்றாக,நன்றாக செயல்படுமன்றோ?
No comments:
Post a Comment