Monday, April 7, 2014

1.Aram seya virumbu

  "அறம்"


   இது ஒரு அருமையான வார்த்தை.இந்த சொல்லின் ஒலியை  கேட்பதே 

இதம் தரும் ஒரு இனிமையான  வார்த்தை.எல்லா அறங்களிலும் சிறந்த 

அறம் நமது வார்த்தைகளில் இதம் சேர்க்கும்,இனிமை கூட்டும்,மனம் 

நிறைந்த,தண்மையான வார்த்தைகள்தான்.எல்லா அறங்களை போலவே 

இந்த அறமும் இல்லங்களில்தான் ஆரம்பிக்கின்றன.ஆரம்பிக்கபட

வேண்டும். 


   நான் எனது பால பருவம் முதலே இந்த இனிமையான வார்த்தைகளின் 

அறத்தை உள்வாங்கி இருக்கிறேன்.எனது தாயார் எங்களை பேர் 

சொல்லிதான் அழைப்பார்.ஆனால் எனது தந்தையார் தனது பெண் 

குழந்தைகள் உட்பட முறைப்படி அழைக்கும் பெண்மணிகளை தவிர எல்லா 

பெண்மணிகளையும் வயது வித்தியாசம்  இன்றி  "அம்மா" என்றுதான் 

அழைப்பார்.எனது தாயாரும் தனது பெண் குழந்தைகளையும் முறைப்படி 

அழைக்கும் உறவுகளை தவிர எல்லா பெண்மணிகளையும் "அம்மா" 

என்றுதான் அழைப்பார்.பிறகு பார்த்தால் எல்லா கிராமங்களிலும் இது 

தொன்று தொட்டு வரும் ஒரு இயல்பாகவே இருந்திருக்கிறது.அந்த 

இயல்பான,தண்மையான,மனதை குளிர்விக்கும் அந்த "அம்மா " என்ற 

வார்த்தை, எனக்கு பிடிக்கும் வார்த்தைகளில் முதல் இடத்தை பிடித்திருக்கும் 

வார்த்தை ஆகும்.

 
   மனம்தான் வார்த்தைகளின் ஊற்று என்பார்கள்.எனவே அதுசரியாக,இதமாக

இருந்தால்தான்  அதன் கண் ஊறும் வார்த்தைகளும் சரியாக,இதமாக

இருக்கும்.அதனால்தான் நம் மனதை நம் நேரடியான கண்காணிப்பில்

வைத்திருக்க வேண்டும்.ஏனென்றால்,நமது மனம் வேகத்திலும் சக்தியிலும்

காற்றை ஒத்தது என்பார்கள்.அதற்கு நல்லது கெட்டது தெரியாதாம்.விசுவாசம்

 மட்டும்தான் தெரியுமாம்.நாம் அதை எந்த திசையில் வழி நடுத்துகிறோமோ

அந்த திசையில் அது  நமக்கு மிக்க விசுவாசமாக இருக்குமாம்.அதனால்தான்

நாம் பெரும்பாலும்  நமது நேர் மறையான பகுதியில் அதனை

உலாவவிட்டால் அது நம்மை  அந்த திசையில் வழி நடத்தி செல்லுமாம்.

நமது வார்த்தைகளும், எந்த சூழ்நிலையிலும் இதமாக,பதமாக வெளி

கொணரப்ப்படுமாம்.

   நல்ல வார்த்தைகள்,செப்புவோரின்,செவி மடுப்போரின் அகத்தையும்,

முகத்தையும் ஒளிர வைக்கும்.தன்னம்பிக்கையை தளிர வைக்கும்.

சூழ்நிலையை உற்சாகபடுத்தி கலகலப்பாக்கும்.

   அதனால்தான் இந்த நேர்மறை  பகுதியில், அகத்திபுறத்திலும்,நாம், நம்மை

நாமே எப்பொழுதும் மேம்படுத்தி கொண்டே இருக்க வேண்டுமாம்.அதனால்

நாமும் இந்த பயிற்ச்சியை ஆரம்பித்து,முதல் அறமான இதமான

வார்த்தைகளில் ஆரம்பித்து மற்ற அறங்களை தொடரலாமா?



       

 





                      

     

No comments:

Post a Comment