மரியாதை என்ற சொல்லுக்கு பொருள் மதிப்பது,மதித்து நடப்பது என்பது
நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.ஆனால் அதன் பொருளை புரிந்து
நடக்கிறோமா? என்பது யோசிக்க வேண்டிய விஷயம்.மனிதன் என்ற
சொல்லுக்கே மரியாதைக்குரியவனாவதற்கான வழி முறைகள் தெரிந்தவன்
என்றுதானே பொருள்.
இராமன் என்ற பெயரே ஸ்ரீராமனுக்கு அவ்வளவு உயர்ந்த மரியாதையை
சம்பாதித்து தருகிறது என்றால், இராமன் அந்த பெயருக்கு எவ்வளவு பெரிய
மரியாதையை சம்பாதித்து கொடுத்திருப்பான்.
நாமும் நாம் சம்பாதிக்கும் மரியாதையும் ரயில் தண்டவாளம் போலவாம்.
அதன் மேல் செல்லும் வாழ்க்கை என்னும் ரயில் வண்டி தடம் புரளாமல்
செல்லுமாம்.அப்படியே சில இடங்களில் எதிர் பாராமல் தடம் புரண்டாலும்
எளிதாக,விரைவாக மரியாதைக்குரிய தண்டவாளத்தை சரி செய்து விட
முடியுமாம்.அதாவது அந்த மரியாதை என்ற தண்டவாளத்தின் மதிப்பை
சரியாக புரிந்து கொண்டால்.அதாவது மரியாதைக்குரிய நம் சொற்கள்,அதைத்
தொடரும் மரியாதைக்குரிய நமது செயல்கள் அதைத் தொடரும் மரியாதைக்
மரியாதைக்குரிய நமது செல்வம் இன்னும் மரியாதைக்குரிய எல்லாமே நம்
வாழ்க்கை என்னும் ரயில் வண்டி சீராக பயணம் மேற்கொள்ள பேருதவியாக
இருக்கும்.
நம் வாழ்க்கையை ஏன் ரயில் வண்டிக்கு ஒப்பிட்டார்கள் என்றால்,நாம் நம்
வாழ்க்கையை தனி ஆளாக வாழ்வது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று.
பெற்றோர்,உற்றோர்,உடன் பிறந்தோர்,சமூகம் என்று எல்லோரும்
எல்லோரையும் சார்ந்து வாழ வேண்டிய கட்டாயத்தை இயற்கையே
உருவாக்கி இருக்கிறது.அதனால்தான் நம் மரியாதைக்கு தகுந்தபடி நம்முடன்
சேர்ந்து பயணப்படும் பெட்டிகளின் எண்ணிக்கையும் ஆகும்.பெட்டிகளின்
எண்ணிக்கைக் கூடக்கூடத்தான் எந்த ரயில்வண்டிக்கும் மரியாதை.நம்
சூழ்நிலைக்கு தகுந்தபடி,நம் உற்றார் உறவினர்களின் சூழ்நிலைக்கு
தகுந்தபடி ,ரயிலின் சீரான பயணத்திற்காக, சிலநேரங்களில் பெட்டிகள்
மாற்றி அமைக்கப்பட வேண்டியிருக்கும்.சில நேரங்களில் நீக்கப்பட
வேண்டி இருக்கும்.சில நேரங்களில் சேர்க்கப்படவேண்டிஇருக்கும்.
ஆனால் எல்லாமே சுமுகமாக நடந்தாக வேண்டும்.இவை எல்லாம்
யாரால் சாத்தியப்படும்.நம்பிக்கைக்குரிய மனிதர்களால்தான் சாத்தியப்
படுத்த முடியும்.யார் நம்பிக்கைக்குரிய மனிதர்கள்? மரியாதைக்குரிய
மனிதர்கள்தான்.வேறு யாரால் முடியும்?.
மரியாதைக்குரியவர்கள் எவ்வாறு உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டு
போற்றுதலுக்கு உரியவர்களாக இருக்கிறார்களோ அதே போலவே
மரியாதைக்குரியவர்களை மதிக்க தெரிந்தவர்களும் போற்றுதலுக்கு
உரியவர்களே.இந்த குணம் உள்ளவர்களை பார்த்து வளரும் குழந்தைகள்,
தாமும் மரியாதைக்குரியவர்களாக உருவாக வேண்டும் என்ற உயர்ந்த
எண்ணத்துடன் வளர்வார்கள்.
மரியாதையை விரும்பும் மனிதர்களின் இன்னொரு பரிமாணம்
அவர்கள் தங்களுக்கும்,மற்றவர்களுக்கும் நலம் பயக்கும் நல்
வழியையே தேர்ந்தெடுக்கும் மாமனிதர்கள். தமக்கு இறைவன்
அருளிய எல்லா வகை செல்வங்களையும் கொண்டு தன் மரியாதையை
தன்னை சார்ந்தவர்களின் மரியாதையையும் உயர்த்திக் கொண்டே
இருப்பார்கள்.அவர்களது உள்ளமும் உயர்ந்து கொண்டே போகும்.அவரை
சார்ந்த எல்லோரையும் முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும்.
இவ்வுலகம்இந்த மாதிரி மாமனிதர்களால்தான் பல பல இக்கட்டுகளையும்
தாண்டி சீராக இயங்கிக் கொண்டு இருக்கிறது என்பதுதான் உலக
உண்மை.
நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்.ஆனால் அதன் பொருளை புரிந்து
நடக்கிறோமா? என்பது யோசிக்க வேண்டிய விஷயம்.மனிதன் என்ற
சொல்லுக்கே மரியாதைக்குரியவனாவதற்கான வழி முறைகள் தெரிந்தவன்
என்றுதானே பொருள்.
இராமன் என்ற பெயரே ஸ்ரீராமனுக்கு அவ்வளவு உயர்ந்த மரியாதையை
சம்பாதித்து தருகிறது என்றால், இராமன் அந்த பெயருக்கு எவ்வளவு பெரிய
மரியாதையை சம்பாதித்து கொடுத்திருப்பான்.
நாமும் நாம் சம்பாதிக்கும் மரியாதையும் ரயில் தண்டவாளம் போலவாம்.
அதன் மேல் செல்லும் வாழ்க்கை என்னும் ரயில் வண்டி தடம் புரளாமல்
செல்லுமாம்.அப்படியே சில இடங்களில் எதிர் பாராமல் தடம் புரண்டாலும்
எளிதாக,விரைவாக மரியாதைக்குரிய தண்டவாளத்தை சரி செய்து விட
முடியுமாம்.அதாவது அந்த மரியாதை என்ற தண்டவாளத்தின் மதிப்பை
சரியாக புரிந்து கொண்டால்.அதாவது மரியாதைக்குரிய நம் சொற்கள்,அதைத்
தொடரும் மரியாதைக்குரிய நமது செயல்கள் அதைத் தொடரும் மரியாதைக்
மரியாதைக்குரிய நமது செல்வம் இன்னும் மரியாதைக்குரிய எல்லாமே நம்
வாழ்க்கை என்னும் ரயில் வண்டி சீராக பயணம் மேற்கொள்ள பேருதவியாக
இருக்கும்.
நம் வாழ்க்கையை ஏன் ரயில் வண்டிக்கு ஒப்பிட்டார்கள் என்றால்,நாம் நம்
வாழ்க்கையை தனி ஆளாக வாழ்வது என்பது சாத்தியமே இல்லாத ஒன்று.
பெற்றோர்,உற்றோர்,உடன் பிறந்தோர்,சமூகம் என்று எல்லோரும்
எல்லோரையும் சார்ந்து வாழ வேண்டிய கட்டாயத்தை இயற்கையே
உருவாக்கி இருக்கிறது.அதனால்தான் நம் மரியாதைக்கு தகுந்தபடி நம்முடன்
சேர்ந்து பயணப்படும் பெட்டிகளின் எண்ணிக்கையும் ஆகும்.பெட்டிகளின்
எண்ணிக்கைக் கூடக்கூடத்தான் எந்த ரயில்வண்டிக்கும் மரியாதை.நம்
சூழ்நிலைக்கு தகுந்தபடி,நம் உற்றார் உறவினர்களின் சூழ்நிலைக்கு
தகுந்தபடி ,ரயிலின் சீரான பயணத்திற்காக, சிலநேரங்களில் பெட்டிகள்
மாற்றி அமைக்கப்பட வேண்டியிருக்கும்.சில நேரங்களில் நீக்கப்பட
வேண்டி இருக்கும்.சில நேரங்களில் சேர்க்கப்படவேண்டிஇருக்கும்.
ஆனால் எல்லாமே சுமுகமாக நடந்தாக வேண்டும்.இவை எல்லாம்
யாரால் சாத்தியப்படும்.நம்பிக்கைக்குரிய மனிதர்களால்தான் சாத்தியப்
படுத்த முடியும்.யார் நம்பிக்கைக்குரிய மனிதர்கள்? மரியாதைக்குரிய
மனிதர்கள்தான்.வேறு யாரால் முடியும்?.
மரியாதைக்குரியவர்கள் எவ்வாறு உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்டு
போற்றுதலுக்கு உரியவர்களாக இருக்கிறார்களோ அதே போலவே
மரியாதைக்குரியவர்களை மதிக்க தெரிந்தவர்களும் போற்றுதலுக்கு
உரியவர்களே.இந்த குணம் உள்ளவர்களை பார்த்து வளரும் குழந்தைகள்,
தாமும் மரியாதைக்குரியவர்களாக உருவாக வேண்டும் என்ற உயர்ந்த
எண்ணத்துடன் வளர்வார்கள்.
மரியாதையை விரும்பும் மனிதர்களின் இன்னொரு பரிமாணம்
அவர்கள் தங்களுக்கும்,மற்றவர்களுக்கும் நலம் பயக்கும் நல்
வழியையே தேர்ந்தெடுக்கும் மாமனிதர்கள். தமக்கு இறைவன்
அருளிய எல்லா வகை செல்வங்களையும் கொண்டு தன் மரியாதையை
தன்னை சார்ந்தவர்களின் மரியாதையையும் உயர்த்திக் கொண்டே
இருப்பார்கள்.அவர்களது உள்ளமும் உயர்ந்து கொண்டே போகும்.அவரை
சார்ந்த எல்லோரையும் முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லும்.
இவ்வுலகம்இந்த மாதிரி மாமனிதர்களால்தான் பல பல இக்கட்டுகளையும்
தாண்டி சீராக இயங்கிக் கொண்டு இருக்கிறது என்பதுதான் உலக
உண்மை.
No comments:
Post a Comment