Sunday, April 13, 2014

2.Nesikka Virambu (Unnai)

    "நேசித்தல்". இன்னொரு  இதமான  உணர்வு. நம்மை நேசிப்பவர்களை,

நாம் நேசிப்பவர்களை நாம் நினைக்கும்போது  நாம் ஒரு பாதுகாப்பான

உணர்வை பெறுகிறோம்.நமது நேசிப்பிற்கு தகுதியனவர்கள் என்று நமது

மனதில் சிலர் நிறைந்திருப்பார்கள்.அவர்களிடம் நமது அணுகு முறையே

 மேலானதாக இருக்கும்.அவர்களுக்கு ஏதாவது ஒரு தேவை என்றால் நாம்

முதல் ஆளாய் சென்று நிற்போம்.அவர் ஏதாவது தம்மை அறியாமல் தவறு

செய்தால் அன்புடன் கடிந்து கொள்கிறோம்.அந்த தவறை நேராக்க நமது

நியாயமான உதவிக்கு வழி இருப்பின் அதற்கும் முயற்சிப்போம்.இந்த வழி

முறைகளை எல்லாம் நம்மை முன்நிறுத்தி  யோசிப்போமானால்,அதுதான்

நாம் நம்மை நேசிப்பதின் முதல் படி.அதாவது நாம் நம் நிலை பற்றி

யோசிப்பது.

    ஆனால் நாம் என்றாவது நம்மை நேசிப்பதை பற்றி யோசித்திருக்கிறோமா?

சுயநலம் பற்றிதான் யோசித்திருக்கிறோம்.சுயநலம் என்பது வேறு.நம்மை

நாம் நேசிப்பது என்பது வேறு.சுயநலம் என்பது அடுத்தவரை வருத்தி நாம்

அனுபவிப்பது.அல்லது அடுத்தவரை பற்றி எந்த சிந்தனையும் இல்லாமல்

நமது உயர்வை பற்றியே சிந்தித்து கொண்டிருப்பது.


   நம்மை நாம் நேசிப்பது என்பதின் இன்னொரு பரிமாணம் நம் கௌரவத்தை

நாம் நேசிக்கும் உண்மையாகும். நாம் யார்?நமது குடும்ப பின்னணி என்ன?

அதன் உயர்வுக்கு நமது பங்கு என்ன?இந்த பங்கெடுப்பில் நமது குணங்களின்

பங்கு என்ன? எந்த குணத்தை கூட்ட வேண்டும்.எந்த குணத்தை குறைக்க

வேண்டும் என்பதில் தனி கவனம் செலுத்த வைப்பது நமது கௌரவ

நேசிப்பாகும்.இந்தகௌரவநேசிப்பு என்பது நம்மையும் துன்புறுத்தாது.அடுத்த

வரையும் துன்புறுத்தாது.தனக்கு இறைவன் அளித்த வசதி வாய்ப்புகளை

நன்றியுடன் ஏற்றுக்கொண்டு  அந்த வசதி வாய்ப்புகளை நேராக்கி சீராக்கி

தனது கௌரவத்தை உயர்த்த முயற்சிக்கும் நம்மை நாம் நேசிக்கும் குணம்.


   நம்மை நாம் நேசிக்கும் குணத்தின் அடுத்த படி என்பது அமைதிக்கும்

வளர்ச்சிக்கும் அடிகோலும் அடுத்த உயர்ந்த படி.ஒவ்வொரு

தனி மனிதனின் அமைதியும் வளர்ச்சியும்தான் ஒரு குடும்பத்தின் அமைதியும்

வளர்ச்சியுமாகும்.அதுவே ஒரு ஊரின்,ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது

கண்கூடான உண்மை.அதனால் நாம் நம்மை நேசிக்கும் முதல் படியில்

ஏன் கால் பதிக்க கூடாது?             

No comments:

Post a Comment