Wednesday, April 16, 2014

3.sinavidam sellaa virumbu.

   நாம் நம்மை நேசிக்க ஆரம்பித்து விட்டோம் என்பதன் முதல் அடையாளமே

நாம் நமது சக்தி வாய்ந்த மனதை சீரிய பாதையில் சீராக செல்ல ஆயுத்தப்

படுத்தி விட்டோம் என்று பொருள்.எவ்வாறு நாம் நேசிப்பவருக்கும் நம்மை

நேசிப்பவருக்கும் எந்த கெடுதலும் வரக் கூடாது என்று எப்பொழுதும் ஒரு

எச்சரிக்கை உணர்வுடன் இருப்போமோ,அந்த எச்சரிக்கை உணர்வு நமது

மனதின்பாலும் எழும்.


   நாம் நம் மனதை கவனிக்க ஆரம்பித்து  விட்டோம் என்று நம் மனதிற்கு புரிய

ஆரம்பித்தவுடன்,அது நாம் அதனை செலுத்தவிருக்கும் திசையை இனம்

கண்டு  கொள்ளும்.அதுதான் விசுவாசமிக்க சக்தி வாய்ந்த ஒன்றாக

இருக்கிறதல்லவா?பிறகென்ன? அந்த சக்தி வாய்ந்த விசுவாசமிக்க நம் மனம்

நாம் காட்டும் சீரிய பாதையில் சீராக,பூரண விசுவாசத்துடன் தன் பயணத்தை

தொடரும்.அதன் பயணத்தில்,நம் அருகாமையை அதற்கு புரிய வைத்து

அதனை பல வழிகளிலும் மேன்மை படுத்தும் முயற்சிகளில் நாம் விரும்பி

இறங்கினோமானால் அது வெகு விரைவிலேயே தன்னை செம்மைப் படுத்த

தொடங்கிவிடும்.அதன் பிறகு நாம் அதற்கு புகட்டிய சீரிய வழியை நாம்

சிறிது மறந்து பிறழ்ந்தாலும் அந்த விசுவாசமிக்க,வலிமை வாய்ந்த நம் மனம்

நம்மிடம் கற்றதையே,நமக்கு நினைவூட்டி,நினைவூட்டி எந்த சூழ்நிலையிலும்

நாம் பிறழ்ந்து போகாமல் நம்மை காக்கும் வல்லமை வாய்ந்தது.


    இவ்வாறு அரிய ஆற்றலுடன் செயல்படும் திறன் கொண்ட நம் மனதை நாம்

எப்போதும் சிறப்பாக கையாள, மனதார விருப்பபட வேண்டும்.அதற்கு

ஒவ்வொன்றாக நேர்மறை எண்ணங்களை அறிமுகபடுத்தி,அதன்

பலன்களை அதன் மனதில் படிய வைக்க வேண்டும்.நாம் மனதார விருப்பப்

பட்டால்தான் அதன் மனதில் பதிய வைக்க முடியும்.


   இப்போது நாம் ஒரு நேர்மறை எண்ணமாக  'சினவிடத்தில் செல்லா விரும்பு '

என்று நம் மனதிற்கு அறிமுகபடுத்துகிறோம்.முதலில் நாம் அதனை சரியாக

புரிந்து கொண்டால்தான் நம் மனதிற்கு அதை பதிய வைக்க முடியும்.

எவ்வாறு மின்சாரம் பாயும் பகுதியில் நாம் தெரிந்ததோ,தெரியாமலோ அந்த

அபாய பகுதியில்  நம் உடல் பட நேரிடின் அதிர்ச்சி ஏற்படுமோ,அவ்வாறே நம்

குடும்ப சுழ்நிலையிலும் அந்த அபாய பகுதி,அந்த அதிர்ச்சி தரும்

பகுதிஎதுவென்றால் ஒரே குடும்பத்தை சார்ந்தவற்குள்ளும் ' நான் ', ' எனது'

என்ற தீய எண்ணம் உள்ள அந்த பகுதிதான் குடும்பத்திற்குள் சினமெனும்

மின்சாரத்தை செலுத்தி அதன் அதிர்ச்சியை கடும் வார்த்தைகளின் வடிவில்

அதிர்ச்சி மேல் அதிர்ச்சிகளாய் அதிர வைத்து  சகல மனதையும் சாகடிக்கும்.


    எனவேதான் ஒரு குடும்பஅமைதிபெற,எந்நேரமும் சினமஎன்னும் மின்சாரம்

பாயும் 'நான், ' எனது ' என்ற அந்த அபாய எண்ண பகுதிக்குள்

செல்லும்படியான எந்த சந்தர்பத்தையும் ஒரு குடும்பத்தின் அங்கத்தினர்கள்

ஏற்படுத்திவிடாமல் இருப்பது சால சிறந்தது. மாறாக, குடும்ப

அங்கத்தினர்களின் "நாம்" , " நமது " என்ற நல்ல எண்ணம் உள்ள அந்த

 பகுதிதான் ஒருகுடும்பத்தின் பாதுகாப்பானபகுதியாக பகுத்தரியப்படுகிறது

இதனை நாம்   சரியாக புரிந்து கொள்கிறபோது நமது மனதிற்கும் புரிய வைத்து

 பதியவைப்பதும் எளிதாகிறது.






No comments:

Post a Comment