Monday, September 8, 2014

10.Thai Mann.

   விஜயன் பயணித்த வண்டி,விஜயனின் ஊர் வந்து சேர்ந்தது.வண்டியின்

சத்தம் கேட்டதும், என்னஆச்சரியம்! விஜயனின் சொந்தங்களுடன்

அவனது ஊரே வண்டியின்எதிரே வந்து கூடி நின்றது. தனது சொந்த மண்ணின்

இயல்பான,ஆழமான,ஆத்மார்த்தமான,ஆரவாரமான  வரவேற்பில் விஜயன்

உருகிபோனான்.பிரவாகமாக பொங்கி நீர்வீழ்ச்சியாக உருமாறிக்

கொண்டிருந்த அவனுடைய கண்கள்  சொந்தங்களுடன் கரைந்து

உருகிக் கொண்டிருந்தன.



    தான்  மனதளவிலும்,உடலளவிலும் தன் சொந்த மண்ணை மறந்து,அதன்

உணர்வுகளை மறந்து,மரத்துப் போய் எவ்வளவு தூரம் விலகி இருந்த

போதிலும் நீ என்றும் எங்களை சேர்ந்தவன்; உனக்கு என்றும்,எதற்கும்

நாங்கள் பக்கபலமாக இருப்போம்  என்று குறிப்பால் உணர்த்திக்

கொண்டிருக்கும் தன்  சொந்த மண்ணின் இந்த சலனமில்லாத அன்பிற்கு தான்

தகுதியானவன்தான? என்று விஜயன் மறுகிப் போனான்.இதையெல்லாம்

கூடவே நின்று கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த அந்த வண்டி ஓட்டுனர்

கூட கண் கலங்கி நின்றார்.



    இதற்குள் விஜயனின் தாய் அவனது சகோதரி கைப்பற்றி விரைந்து

வந்து விஜயனை நெஞ்சார அணைத்து உச்சி முகர்ந்தார்.அவனது

சகோதரியோ, தன் சக உதிரனின் ஒரு கரம் பற்றி அதை தன் நெஞ்சோடு

சேர்த்து கொண்டார்.அவரது பிரவாகமான  அன்பு,அவர்  பற்றியிருந்த

விஜயனின் ஒரு கை மூலம் அவன் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை

பரபரவெனபரவிக் கொண்டிருந்தது.சிலிர்த்துப் போனான் விஜயன்.



   தன் தாயையும்,தன் தமக்கையையும் அவர்கள் கைகள் பற்றி தன் கண்களில்

நீர் மல்கி மங்கலாகத் தெரியும் அவர்களது உருவங்களை  மாறி மாறி உற்று

உற்றுப்    பார்த்துக்கொண்டே  இருந்தான் விஜயன்.தாயும்,தமக்கையும்

திடகாத்திரமாக  இருந்தது மனதிற்கு மிகவும் தெம்பை தந்தது.கூடவே 

அவர்களது வயதும்,ஆரோக்கியமும் ஒன்றை ஒன்று ஆரோக்கியமாக

பராமரித்து வரும் பாங்கு அவர்களது தோற்றத்தில் மிளிர்ந்தது.அவர்களது

ஆரோக்கியமான,கம்பீரமான தோற்றம் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டான்

விஜயன்.



    அவனது தாயோ,அவனை கண்ட அந்த ஒருநிமிடத்தில் விஜயனின் பால

காண்டம் முதல் இப்போது நிலைக்கொண்டிருக்கும் ஓய்வு  காண்டம் வரை

மானசீகமான இனிய பயணம் மேற்கொண்டு தன் நிலை வந்து சேர்ந்தார்.

விஜயனின்  சகோதரிதான் பற்றியிருந்த அவன் கை அசைத்து  அவனை

அவன்  நிலைக்கு கொண்டுவந்து சேர்த்தார்.


    அந்த வண்டி ஓட்டுனர்' விஜயனின் உடமைகளை நிதானமாக

ஒவ்வொன்றாக வண்டியில் இருந்து இறக்கிக் கொண்டிருந்தார்.அவர் தன்

பணியில் இருக்கும்போதே சில இளவட்டங்கள் அவைகளை  துரிதமாக

விஜயனின் இல்லம் கொண்டு சேர்த்தன.அவர்களது ஒன்றிய

மனப்பான்மையை கண்டு அசந்து போனான் விஜயன்.


    எல்லா சேம நலன் பரிமாற்றங்கள் முடிந்தபின் விஜயன் குடும்பத்தினர்

வீடு வரை கொண்டு வந்து  சேர்க்கப்பட்டனர்.பிறகு விஜயன் சிரம

பரிகாரங்களுக்காக சோப்பு,துண்டுடன் கொல்லைப் புறத்திற்கு அனுப்பப்

பட்டான்.பிறகு தாயும்,மகளுமாக விஜயனுக்குப் பிடித்தமான பணியாரங்கள்

தயாரிக்க ஆரம்பித்தனர்.அதற்கான மாவை பிசைந்து கொண்டிருந்த போது

அவர்களுக்கு மிகவும் பரிச்சியமான, படு  நிச்சயமான அந்த அச்சம் அவர்களை

பிசைந்தெடுத்துக் கொண்டிருந்து.




                                                                                                  தொடரும்.........



 


   

No comments:

Post a Comment