தமக்கையின் பதிலால் அதிர்ந்துதான் போனான் விஜயன்.பிறகு அங்கிருந்த
எல்லோரையும் ஒரு முறை உன்னிப்பாகப் பார்த்தான்.எல்லோரது முகமும்
ஒரே உணர்ச்சியைத்தான் காட்டின. அதாவது ஒரே உணர்ச்சியை அதாவது
ஒரு வகை திகில் நிறைந்த முகங்களாக தென்பட்டன.ஒன்றும் புரியாமல்
எல்லோரையும் இன்னொரு முறை உற்றுப் பார்த்தான்.
"என்னக்கா! என்ன விஷயம்? செல்லம்மா பேரைக் கேட்டாலே ஏன்
எல்லோரும் ஒரு மாதிரியா இருக்கீங்க?நான் வருவது அவளுக்குத்
தெரியாதா? எல்லோருமே இங்கே இருக்கறப்போ அவள் மட்டும் எங்கே
போனாள்?.எவ்வளவு ஆசையா வந்திருப்பேன் ,எல்லோரையும் ஒண்ணா
பார்க்கலாம்னு.எங்கே அக்கா போயிருக்கா நம்மக் கடைக்குட்டி செல்லம்மா?".
விஜயன் என்னமோ கேள்வி மேல் கேள்விக் கேட்டுக் கொண்டேதான்
இருந்தான். ஆனால் எந்தக் கேள்விக்கும் பதில்தான் வரவே இல்லை.
குழம்பிப் போனான் விஜயன்.மாமாவைத் திரும்பிப் பார்த்தான்.
அவரிடமிருந்து நீண்ட பெருமூச்சுதான் பதிலாக வந்தது.அரண்டுப்
போனவனாய் எழுந்து தன் தமக்கையின் அருகில் வந்து அமர்ந்தான்.
தமக்கையையே உற்றுப் பார்த்தவாறு இருந்தான்.அவனது நிலையை
சகஜமாக்க மாமா அவருக்கே உரிய சாதுரியத்துடன் விஜயனின் கவனத்தைத்
தன் பக்கம் திருப்பினார்."அது ஒண்ணுமில்லை தம்பி! செல்லம்மாவுக்கு உங்க
மேலேயும்,உங்க குடும்பத்து மேலேயும் சொல்லவொண்ணா கோபம்.அதை
"கோபம்" அப்படின்னு சாதாரணமா எடுத்துக்க முடியாது தம்பி! உங்கக்கா
சொன்ன மாதிரி பத்ரகாளி கோபம் தம்பி! எனக்கும் செல்லம்மாவோட அந்த
கடும் கோபம் நியாமானதுதான்னு படுது".
மாமா என்னாவோ சாதாரணமாகத்தான் சொல்வது போல சொன்னார்.
ஆனால்,அதில் உள்ள வீரியம், சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் விதமாக
இல்லை.விஜயனுக்கு திக்கென்றிருந்தது.செல்லம்மாவை,கடைசியாக
ஒன்றரை வயதுக் குழந்தையாக தன் தமக்கையின் இடுப்பில் ஒன்றி
இருந்தபோது பார்த்தது.இப்போது இவர்கள் எல்லோரும் தரும் அறிமுக
படலத்தை நினைத்தாலே ஒரு மாதிரி படபடவென்று இருந்தது.
தொடரும்...........
எல்லோரையும் ஒரு முறை உன்னிப்பாகப் பார்த்தான்.எல்லோரது முகமும்
ஒரே உணர்ச்சியைத்தான் காட்டின. அதாவது ஒரே உணர்ச்சியை அதாவது
ஒரு வகை திகில் நிறைந்த முகங்களாக தென்பட்டன.ஒன்றும் புரியாமல்
எல்லோரையும் இன்னொரு முறை உற்றுப் பார்த்தான்.
"என்னக்கா! என்ன விஷயம்? செல்லம்மா பேரைக் கேட்டாலே ஏன்
எல்லோரும் ஒரு மாதிரியா இருக்கீங்க?நான் வருவது அவளுக்குத்
தெரியாதா? எல்லோருமே இங்கே இருக்கறப்போ அவள் மட்டும் எங்கே
போனாள்?.எவ்வளவு ஆசையா வந்திருப்பேன் ,எல்லோரையும் ஒண்ணா
பார்க்கலாம்னு.எங்கே அக்கா போயிருக்கா நம்மக் கடைக்குட்டி செல்லம்மா?".
விஜயன் என்னமோ கேள்வி மேல் கேள்விக் கேட்டுக் கொண்டேதான்
இருந்தான். ஆனால் எந்தக் கேள்விக்கும் பதில்தான் வரவே இல்லை.
குழம்பிப் போனான் விஜயன்.மாமாவைத் திரும்பிப் பார்த்தான்.
அவரிடமிருந்து நீண்ட பெருமூச்சுதான் பதிலாக வந்தது.அரண்டுப்
போனவனாய் எழுந்து தன் தமக்கையின் அருகில் வந்து அமர்ந்தான்.
தமக்கையையே உற்றுப் பார்த்தவாறு இருந்தான்.அவனது நிலையை
சகஜமாக்க மாமா அவருக்கே உரிய சாதுரியத்துடன் விஜயனின் கவனத்தைத்
தன் பக்கம் திருப்பினார்."அது ஒண்ணுமில்லை தம்பி! செல்லம்மாவுக்கு உங்க
மேலேயும்,உங்க குடும்பத்து மேலேயும் சொல்லவொண்ணா கோபம்.அதை
"கோபம்" அப்படின்னு சாதாரணமா எடுத்துக்க முடியாது தம்பி! உங்கக்கா
சொன்ன மாதிரி பத்ரகாளி கோபம் தம்பி! எனக்கும் செல்லம்மாவோட அந்த
கடும் கோபம் நியாமானதுதான்னு படுது".
மாமா என்னாவோ சாதாரணமாகத்தான் சொல்வது போல சொன்னார்.
ஆனால்,அதில் உள்ள வீரியம், சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் விதமாக
இல்லை.விஜயனுக்கு திக்கென்றிருந்தது.செல்லம்மாவை,கடைசியாக
ஒன்றரை வயதுக் குழந்தையாக தன் தமக்கையின் இடுப்பில் ஒன்றி
இருந்தபோது பார்த்தது.இப்போது இவர்கள் எல்லோரும் தரும் அறிமுக
படலத்தை நினைத்தாலே ஒரு மாதிரி படபடவென்று இருந்தது.
தொடரும்...........
No comments:
Post a Comment